Friday, April 10, 2009

எதிரி வென்றான்!!!

எதிரி வென்றான்.
தமிழ்சித்தன்

என்னரும் வன்னியை
எரித்தழித்தின்று
எதிரி வென்றான்.

மூல வேரறுத்தெறிந்தும்
"சூல்கொள்" உருவின்
கருவறை அறுத்தும்
சிறுகச் சிறுக எறும்புகள் போல
தமிழன் சேர்த்த
அனைத்தையும் அழித்து
எதிரி வென்றான்.


குழந்தைகள் தலைகளை
அறுத்தறுத்து எறிந்து
அவன் ஏற்றிய கொடியில்
உலகம் மகிழ்ந்தது.

பட்டினியிருந்தேனும் உயிருக்கு
பாதுகாப்பென்று எண்ணிய
குழிகளிற்குள்ளேயே
உயிரோடு புதைந்ததென்
தமிழனின் மூச்சு


தமிழர் சாதியின்
குருதியில் மிதந்த
கடைசிக்குடியிருப்பையும்
எதிரி எரித்தழித்தான்




பட்டினியோடு குற்றுயிராக்கி
வல்லமையிழந்த அந்த மனிதரைப்
பந்தாடிப் பந்தாடி
எதிரி பூரிப்படைந்தான்.


கண்முன்னே காலறுபட்டுக்
கையறுபட்டு முண்டமாய்ப்போன
தமிழர் பிணங்களை
உலகம் கொண்டாடியது.


என் மூதாதையரும்,
நானுமாய் வாழப்பிறந்த
மண்ணினில் இருந்தும்,
வயல்களிலிருந்தும்
கடல்களிலிருந்தும்
கடைத்தெருவிருந்தும்-என்
மக்களை விரட்டிய
பேய்களோடு கூடிப் புணர்ந்து
சன்னதம் ஆடின
உலகப் பசாசுகள்.

உன் வம்சக் கொடிகளை
வேரறுத்தெறிந்த
துயரச் சுமைக்குள் தன்னினைவிழந்து
தவிக்கும் என் வன்னிதாயே
உன்னத் தேற்ற
வழியறிகிலேன் அம்மா!!!





LTTE to blame for suffering of Tamil civilians -
Presidents tells Ban Ki-moon
President Mahinda Rajapaksa has told the UN Secretary-General Ban-moon that the suffering undergone by the Tamil civilians in the No Fore Zone in the north of Sri Lanka is the sole responsibility of the LTTE that was holding them as a human shield, despite many calls for their freedom.
This was said when Mr. Ban Ki-moon had a telephone conversation with President Rajapaksa at Libya yesterday (April 9) where the he is at present on a three day State Visit.
In the telephone conversation initiated by the UN Secretary-General to discuss the prevailing humanitarian situation regarding Tamil civilians in the North of Sri Lanka, Mr. Ban Ki-moon had expressed his concern about the thousands of civilian trapped in the No Fire Zone.
President Rajapaksa told Mr. Ban Ki-moon that he understood the Secretary-General's deep preoccupation with the fate and condition of this civilian population, and informed him that all of the suffering of the civilians was due to the LTTE continuing to hold them hostage and as human shields, ignoring the many calls by the UN and humanitarian organizations to free them.
He had also informed the UNSG of the continuing numbers of civilians who were fleeing the LTTE's hold in the rapidly diminishing land they control, where these civilians are held people forcibly, and facing great danger to come to the Safe Zone established by the Government.
President Rajapaksa had also assured the UNSG that Sri Lanka was aware of and observes all international obligations to protect civilians, and repeated his call on the UN and all interested parties to bring increased pressure on the LTTE to give the people the freedom to leave the affected area.
The UN Secretary-General and the Sri Lankan President agreed to continue working together in the coming days for the interests of the affected civilians in the North of Sri Lanka.
Earlier, Sir John Holmes UN under-secretary general for humanitarian affairs and emergency relief coordinator, writing to The Guardian UK of April 08, 2009, said: "Civilians trapped by the fighting must be allowed a free choice of whether to leave or stay, as we have made clear to the LTTE. If the LTTE truly has the best interests of the Tamil people at heart, they should contribute to ending this unnecessary civilian suffering.
"The LTTE's leadership claims the civilians in the conflict zone do not want to leave because they accompanied the LTTE voluntarily in the first place and are afraid of government reprisals. Yet there are continuing reports that the group's fighters are shooting at fleeing civilians, limiting fishing and sabotaging boats that might be used to escape, and forcing people to fight against their will."
He adds that: "There have been many hundreds of civilian deaths caused by firing from both sides, though exact numbers and who fired at what and when is impossible to verify. It is clear that the LTTE is refusing to let people flee, though many are managing to escape somehow, and I fear the combatants may be gearing up for a final confrontation. This is a very grave situation."
Meanwhile, there are news reports that Erik Solheim, the Norwegian International Development Minister, had told a group of Tamil demonstrators, who had recently gathered outside he Norwegian Parliament demanding that Norway intervene to stop the war in Mullaitivu, that LTTE leaders now in the No Fire Zone in Mullaitivu were maintaining close contact with the United Nations.
Courtesy: Presidential Media Unit

3 comments:

Anonymous said...

எதிரி இன்னும் எம்மை வெல்லவில்லை ஐயா.அவனால் அது முடியாது.
கீரன்

Anonymous said...

உலகம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா? புலிகள் அழிகிறார்கள் என்றும்?? பயங்கரவாதம் என்ற ஒன்று வேரோடு ஒழிக்கப்படுகிறது என்றும், இனிமேல் யாருமே உலகில் தனி நாடு கேட்டுப் போராடமாட்டார்கள் எனும் துணிவிலும் உலகம் இன்று இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை உற்றுப் பார்த்து உதவிகள் பல வழங்கி ஊமையாயிருக்கிறதாம். புலிகள் ஒழிகிறார்கள் என்ற போர்வையில் இன்று அழிந்து கொண்டிருப்பது அப்பாவித் தமிழ் மக்கள்? அந்த அப்பாவிகள் யார்? இடம்பெயர்ந்து இனியும் ஓட இடமின்றி
‘பிறந்த மண்ணிற்குப் போவதற்குப் பாஸ் எடுப்பதிலும் பார்க்க
இறந்து படல் மேல்’ என்ற இறுமாப்போடு இருக்கின்ற பாதுகாப்பு வலய மக்கள்.




பாவம் உலகத்து மனிதாபிமான நடவடிக்கை நலன் விரும்பிகள்? என்ன செய்வார்கள் அவர்கள்? பயங்கரவாதம் ஒழிகிறது என்று நினைத்து முதுகில் தட்டிக் கொடுக்கிறார்கள். பயங்கரவாதம் அழிகையில் அப்பாவிகள் கொல்லப்படுவது நியாயம் என்று நிதானமாக நீண்ட சிந்தனையில் இருக்கிறார்கள். எது பயங்கரவாதம்? யாராவது விளக்கம் சொல்லுவீர்களா?? எவருக்காவது எது பயங்கரவாதம் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் கூறத் தெரியுமா??



’பூதகிகள் பாலூட்ட வருகையில் முலையறுப்பதும், கடிக்க வரும் நாயை ஓட வைக்கக் கல் எடுத்து எறிவதும் , கொத்தவெனப் படமெடுக்கும் விசப் பாம்பைக் கொன்று போட நினைப்பதும் தான் பயங்கரவாதமோ? என்னய்யா வேடிக்கை இது? என்ன மனச்சாட்சி உள்ள உலகம் இது? என்ன மௌனித்துப் போய் விட்டீர்களா? கொஞ்சமாவது உங்கள் வாய்களைத் திறவுங்களேன்?? என்ன பயங்கரவாதம் பாதுகாப்பு வலயத்திற்குள்ளா புதைந்து கிடக்கிறது??



பாவம் எங்கள் உறவுகள்? அம்பலவண் பொக்கணையிலும், வலைஞர்மடத்திலும், புதுமாத்தளனிலும் பதை பதைக்கத், துடி துடிக்க நாளொரு பொழுதாகச் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்? ஈழத் தமிழர்கள் என்ன இருண்ட கண்டத்திலா அந்தரிக்கிறார்கள்? இன்று அஞ்சி ஓடி அவலப்பட்டுச் செத்து மடிபவர்கள் யார்?? அவர்கள் யாரிடம் வேண்டுகை வைப்பார்கள்?



‘நேற்று வரை உலகம் அவர்களையே அதிகமாகப் பேசியது.
வன்னியில் நிமிர்ந்துள்ளோர் என்று உற்றுப் பார்த்து உறவாடியது.
ஆனால் இன்றோ??? அழியட்டும் அவர்கள் என ஆழத் துயில் கொள்கிறது??? என்ன செய்யும் உலகம் எங்கள் உறவுகளுக்கு??



’கையெடுத்த கடவுளருமே ஈழத் தமிழர்களுக்குக் கை கொடுக்கவில்லை?
அப்பமாக, அவல் பொரியாக, மோதகமாக வாங்கி உண்ட கடவுளர்
ஈழத் தமிழரைக் கைவிட்டு விட்டனராம்?
உலகம் மட்டும் இன்று உறக்கத்தில் இருக்கிறதாம்?? விடுதலை வேண்டியவர்களைப் பயங்கரவாதம் என்று சொல்லி வீர முழக்கமிடுகிறதாம் உலகம்? இது என்ன வேடிக்கை பாருங்களேன்??



’பாதுகாப்பு வலயத்திலும் பதுங்கு குழிகள்?
பாதுகாப்பு வலயம் என்பதன் அர்த்தம் என்ன?
ஓ அப்படியாயின் பதுங்கு குழிகளும் உயிர் பறிக்கும் குழிகள் தானே??



உலகம் எல்லாம் வாய் நிறையப் புன்னகையோடு வாழும் மனிதர்களே?
எப்படி வாய் நிறைய அழுகிற இந்த மனிதர்களைப் பார்க்க முடிகிறது உங்களால்??
என்ன செய்யப் போகிறீர்கள்?
கரங் கொடுத்து இவர்களின் கண்ணீரைத் துடைக்க மாட்டீர்களா??
இவர்களின் வாழும் உரிமையை வரமளிக்க மாட்டீர்களா?
இவர்கள் பட்டினியில் சாக ஒரு பிடி உணவையேனும்
உங்களால் ருசித்து உண்ண முடியுமா??
மனிதர்களின் மனச் சாட்சி அதற்கு இடம் தருமா??


உலகம் இதயமின்றி இரங்க மனமின்றி இறுமாப்போடு இருக்கிறதாம்?? யாரிடமும் சொல்லி அழ முடியாதுள்ளவர்கள் வேறிடம் சென்று வாழ மாட்டார்கள்??
’சொந்த நிலத்தில் குந்தி இருக்க ஓர் குடி நிலம் கேட்பது தப்பா?? யாரும் ஏதும் சொல்லாமல் உறங்கிக் கிடக்கிறீர்கள் போலும்??? அழியும் நிலையில் இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள்??


மீண்டும் அவர்களின் வாசற் கதவுகள் திறக்கப்படும்! மீண்டும் ஆண்ட பரம்பரை தேராவில் வீதியிலும், ஆனையிறவுப் பெரு வெளியிலும், அம்பகாமத்திலும் அச்சமின்றி அகலக் கால் வைக்கும்? இதுவெ உலக நியதி? இன்று புலிகள் அழிந்து விட்டார்கள் என எல்லோர் முகங்களும் புன்னகை புரியலாம்? இன்னும் இருப்பது ஐந்து கிலோமீற்றர்கள் தூரமே என இசைப்பாட்டும் இயற்றிப் பாடலாம்? குண்டு துளைப்பினும் பிரபாகரன் படைகள் சாகமல் குறி தவறாமல் தாக்குகிறார்கள் எனப் பெரும் கோசமும் எழும்பலாம்?? வந்த பகையை நிச்சயமாய்த் தமிழன் வெல்லுவான் என்பதும் நாளை ஓர் வரலாறாக மாறலாம்???



தர்மம் அழிந்ததாகவோ, அதர்மம் மோலோங்கியதாகவோ இது வரை யாரும் இலக்கணம் சொன்னதில்லை??? தர்மம் வெல்லும் என்பது வரலாறு??



‘இப்போது இங்கு வரும் காட்சிகளை நீங்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தோ
மெத்தையில் இருந்தோ பார்த்து மகிழலாம்?



புலிகள் எப்போது அடிப்பார்கள்? என நானும் நீங்களும் புலத்தில் இருந்து புதிய கவிதைக்கான தலைப்பும் தேடலாம்????


புலிகள் அடிக்கையில் கொடியோடு வீதியில் இறங்கி வீராவேசம் காட்டப் புலத்தில் இருந்து நானும் நீங்களும் புறப்படலாம்??



குளிரூட்டிய அறைக்குள் இருந்து நானும் நீங்களும் புலிகள் அடித்தால் மகிழ்ச்சியாகவும், அடிக்கவில்லை என்றால் துக்கமாகவும் எங்கள் காலத்தைக் கழிக்கலாம்???



‘வன்னிக் குழந்தையாயிற்றே என்று வகை பிரித்து இந்தத் துயர் நிறைந்த காட்சிகளைக் கண்டு உலகம் தூங்கியிருக்கலாம்??? அவர்கள் காத்திருக்கிறார்கள் தங்கள் சொந்த ஊரிற்குப் போவதற்காக?? அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் உலகத்து மனிதர்களைப் போலத் தாமும் உரிமையோடு வாழ்வதற்காக?? வழிகளைத் திறவுங்கள் உலகத்து மனிதர்களே இவர்களுக்காக??



அடக்கு முறைக்கு எதிராகப் போராடியவர்கள் வீழ்ந்ததாக வரலாறு இல்லை.. நாளை நானும் நீங்களும் புலிகள் அழிந்து விட்டால் புலம் பெயர் வாழ்வின் பரவசத்தில் எம்மை நாமே மறந்து, வரலாறுகளைத் தொலைத்தவர்களாய் வண்ண வண்ணக் கனவுகளோடும் வலம் வரலாம்? ஆனால் அடக்கப்பட்ட இனத்திலிருந்து மீண்டும் ஓர் பிள்ளை பிறப்பான்? அவன் பனங்காம மண்ணுள், வன்னிக் காட்டுப் பற்றைகளுக்குள் புதைந்துள்ள துப்பாக்கியினைத் தேடி எடுப்பான்? அவனிலிருந்தும் மீண்டும் ஒரு சரித்திரம் ஆரம்பமாகும்?? அவன் மீண்டும் தன் முந்தையர் வீரத்தை நிலை நிறுத்தப் புறப்படுவான்?



அப்போது நானும், நீங்களும் எங்கள் பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இனி எப்போது புலிகள் அடிப்பார்கள்? எத்தனை ஆமி செத்தவனாம் என்று கேட்டு இன்ரநெற்றைத் தட்டிக் கொண்டிருப்போம்? அட விழுந்தாலும் இவர்களுக்கு மீசையிலை மண் ஒட்டவேயில்லை என்று றம்புக்வெலவினதும், கோத்தபாய, மகிந்தவினதும் வம்சக் குழந்தைகள் மீண்டும் ஓர் சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையில் எஞ்சியுள்ள மெலிவதற்கு இடமுமின்றி, பட்டினியால் வாடி, எலும்பும் தோலுமாக உள்ள தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருப்பார்கள்??



உலகம் அப்போது தான் விழித்துக் கொள்ளும்? பழைய விண்டோஸ் விஸ்டாவில் பதியப்பட்ட வன்னிப் படுகொலைகளைத் தூசு தட்டிப் பார்த்து விட்டு ‘அட நாங்கள் எல்லோரும் பிழை விட்டு விட்டோம்? எங்கள் முந்தையர்களாவது தமிழர்களுக்குத் தனி நாட்டினைக் குடுத்திருக்கலாம்?? விழுந்தாலும் மானத்தோடு விழுபவன் தமிழன் அல்லவா?? இனிமேலும் தமிழர்களைப் பணியவைக்க முடியாது என்று சொல்லி தங்கள் மூதாதையர் தமிழர்களின் தனி நாட்டினைக் கண்டு கொள்ளவில்லையே என மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுத் தமிழர்களுக்கென்று தனி நாட்டினை வழங்கி உலகம் மகிழ்வெய்தும்?? அப்போது நான் என்ன செய்வேன்?? நீங்கள் என்ன செய்வீர்கள்?? ‘பிஸ்ணஸ் கிளாஸில்(Bussiness Class) பிளைட் ரிக்கற் புக் பண்ணிக் கிளிநொச்சிக்குச் சென்று இப்போது உள்ள வன்னிப் படுகொலைகள் நிறைந்த வீடீயோக்களும், சண்டைக் காட்சிகளும் கலந்த திரைப்படம் திரையிடப்படுகையில் பின்னிருக்கையில் அமர்ந்து விசிலடித்துப் பார்த்து மகிழ்வோம்?? இது தானே எம்மால் முடிந்தது??? சீ....தூ.....
(இன்னும் ஒரு இரண்டு மாசம் பொறுங்கோ?? இதில் உள்ள நிறைய விடயங்கள் உங்களுக்குப் போகப் போகப் புரியும்??????)

Unknown said...

துயரம் நெஞ்சைத் தொடுகிறது. நாம் என்னதான் செய்வது.விடைதெரியாது ஏங்குகிறதுமனம். தமிழரின் விடிவு???
அபி

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter