பெருமளவில் மக்கள் வெளியேற்றம்
ஒரு லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர்-
இலங்கை இராணுவம்
இலங்கையின் வடக்கே மோதலற்ற பிரதேசத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மீட்பு நடவடிக்கை என இலங்கை அரசால் கூறப்படும் நடவடிக்கைகள் மூலம் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் மோதலற்ற பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை தற்போது இராணுவம் மீட்டுள்ளது என்றும் மீதமுள்ள பிரதேசத்தினையும் தமது கட்டுப்பாட்டுல் கொண்டுவரும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறியுள்ளார்.
தயா மாஸ்டர் மற்றும் ஜார்ஜ் மாஸ்டர் ஆகியோர் சரண்?
தயா மாஸ்டர்
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவு இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்கிற வேலாயுதம் தயாநிதியும், அந்த அமைப்பின் மொழிபெயர்ப்பாளருமான ஜார்ஜ் மாஸ்டர் என்பவரும் இன்று இராணுவத்திடம் சரணடைந்துள்ளதாகவும் இலங்கை இராணுவம் தெரிவிக்கிறது.
இந்த இருவரும் தாங்கள் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்று ஒப்புக் கொண்டதாகவும் இராணுவம் கூறுகிறது. இவ்வருடம் முதல் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்துள்ள மக்களில் சுமார் 3,000 பேர் தாங்கள் புலிகள் அமைப்புடன் இணைந்திருந்தவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் என்று தெரிவித்துள்ளதாகவும் இராணுவம் மேலும் கூறுகிறது.
4 comments:
தகவலுக்கு நன்றி.
என்னால நம்ப முடியாது இச் செய்திகளை. இதுவெல்லாம் அரச கூலிப்படைகளின் கைக்கூலிகளின் செய்தி. தயா மாஸ்டர் ஒரு போதும் சரண்டர் ஆகமாட்டார் . அண்ணரின் விசுவாசிகள் என்றும் வீண் போக மாட்டார்கள்.
சுந்தரம்.
உண்மை கண்ணுக்கு முன்னால் இருக்க நன் ஒத்துக் கொள்ளமாட்டேன் என்று வல்லுக்கு நின்று தான் நீங்களும் குழம்பி எல்லோரையும் குழப்பிக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறியள் இனியும் என்ன கேக்கிறிங்கள்??
/அண்ணரின் விசுவாசிகள் என்றும் வீண் போக மாட்டார்கள்/
இனியும் நம்புகிற உன்ன மாதிரி ஆட்கள் முதலில போடணும்.
This war was started by TamilTiger, now they failed to win.
Thats it.
Ram
Post a Comment