கனேடியக் காசு பறிக்கும் கூட்டத்தினரின் அறைகூவல்.
வன்னிஅவலத்திற்குள் சீரழிந்து சிதைத்தெறியப்பட்ட தமிழர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடிக்க வேண்டுமா?
100 டொலர் நோட்டுகளோடு ஓடோடி வாருங்கள்!!!!
ஏமாந்த தமிழர் தலையில் மேலும் மேலுமாய் மிளகாய் அரைக்கிறது கனடிய ஊதுகுழல்கள்.வன்னிக்குள் சிக்கிய உறவுகளுக்குப் பரிகாரம் பண்ணுகிறோம் என்றும் தொலைந்த ஆட்களைக்கண்டு பிடிக்கின்றோம் என்றும் பொய்புனைந்து தமிழ் மற்றும் சிங்கள வேடதாரிகள் தமிழர்களை மேலும் சுரண்டும் கைங்கரியத்தில் ஈடுபடுவதால் தமிழர்களே இப் பேய்களிடம் சிக்காமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று "மானிட நேயக்குழு" எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்க்கிடையே கனேடியத் தமிழர்களுக்காகப் பேசவல்லவர்களாகத் தங்களைப் பிரகடனப்படுத்தியுள்ள காங்கிரஸ் டேவிட் பூபாலபிள்ளைக்கும் மற்றும் தமிழர் முன்னணி
யூட் பேரேராவிற்கும் முறுகல் நிலை தொடர்வதாகவும் கனடாவிலிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment