Wednesday, July 29, 2009

எது பொய் ??? எது உண்மை ???

குட்டக்குட்டக்குனியாதே தமிழா !

எது பொய் ??? எது உண்மை ???


கீழ் வரும் செய்திகள் முக்கியமான செய்திகளாக இன்றய நாளில் கணிப்பிடப்படும் செய்திகள். இரண்டுமே முன்னுக்குப்பின் முரணானது. பழ நெடுமாறனைச்சுற்றியும், பத்மநாதனைச் சுற்றியும் பல லட்சக்கணக்கான ஈழ, இந்தியத் தமிழர்கள் இன்னமும் ,எல்லாம்இழந்து பட்டுப்போய்க்கிடக்கும் வன்னிமக்களுக்கு ஒரு விடிவு வராதா?? என்கின்ற ஏக்கத்தில் நம்பிக்கையோடு அலைகிறார்கள். ஆனால் முரண்பட்ட இவர்களின் உப்புச்சப்பில்லாத அரசியல் கண்ணாமூச்சிகளில் எந்த நம்பிக்கையை வைப்பது என்பது அலைபவர்க்கும் புரிய வில்லை. அலைய வைப்பவர்க்கும் புரியவில்லை. அனைத்து தமிழரையும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றிய இந்தியாவிடமே தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ளப் போவதாக செல்வராஜா பத்மநாதன் அவர்களும், இந்திய மத்திய அரசே ஈழத்தமிழருக்கு இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர் என்று பழ நெடுமாறன் அவர்களும் கூறும் இவ்வேளை பிரபாகரன் இருப்பது மெய் என்கிறார் நெடுமாறன். பொய் என்கிறார் பத்மநாதன். எது பொய் ??? எது மெய் ???

Tiger chief pins hopes on India
July 29th, 2009
By Our Correspondent
deccanchronicle
Chennai:

Five days after crowning himself the LTTE leader post-Prabhakaran, Selvarasa Pathmanathan alias KP expressed confidence that India would help Eelam Tamils achieve their aspirations for a separate homeland.
In an interview to this newspaper from an undisclosed location in Europe, he also said MDMK general secretary Vaiko and Sri Lankan Tamil Protection Movement convenor P. Nedumaran were unwilling to accept the fact that Prabhakaran was dead.
When asked about Mr Vaiko and Mr Nedumaran maintaining that Prabhakaran was still alive, he said, “They are unwilling to accept the truth. Our leader attained martyrdom along with other cadres in the last phase of war at Mullivaikkal.”
He said he tried to get the mortal remains of the slain LTTE chief. “However, our leader’s blood relatives did not come forward to receive his body,” he said.
KP said several countries in the world, including India, have expressed their concern to the Sri Lankan government about the sufferings of Eelam Tamils.
“At present, we have constituted a working committee that will explore the idea of forming a transnational Tamil Eelam government. The committee is drafting an action plan to achieve Tamil Eelam which has been the dream of our people for over half-a-century,” he said.
“India stood by the marginalised people in the past and helped them achieve liberation. Eelam Tamils across the globe believe that India will help them achieve liberation as it did in the past. India should understand us,” he said when asked about India’s role in the future of Lankan Tamils.
KP also expressed the confidence that the Sinhalese government would accept ethnic Tamils as their equals in due course.

தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவும்:
'டெக்கான் குரோனிக்கல்' இதழில்.... செல்வராஜா பத்மநாதன்



பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக பத்மநாதன் அவர்களிடம் கேட்டபோது, "அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்" எனச் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார். இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளும் ஈழத் தமிழர்களின் துன்பங்களையிட்டு தமது கரிசனையை வெளிப்படுத்திவருவதாகவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். "தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது" எனவும் அவர் தமது தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக விபரிக்கையில் தெரிவித்தார். "ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்" எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், "இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.


பிரபாகரன் நன்றாக இருக்கிறார்: பழ. நெடுமாறன்
இந்திய மத்திய அரசே ஈழத்தமிழருக்கு இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர்!!!

இலங்கை தமிழர் பேரழிவுக்கு காரணமாக இருந்தவர்களில் மலையாளிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன், இந்தியாவில் முக்கிய பதவி வகிக்கும் பி.கே.நாயர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் இந்திய பிரதிநிதி கோபிநாத், ஐ.நா.சபை செயலாளரின் விவகாரத்துறை அதிகாரி விஜய்நம்பியார், இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவின் ராணுவ ஆலோசகரும் விஜய் நம்பியாரின் சகோதரருமான சதீஷ் நம்பியார் ஆகிய அனைவரும் மலையாளிகள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி இந்த பேரழிவை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன், பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.
நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது. தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பழ. நெடுமாறன் பெங்களூரில் பேசினார்.

4 comments:

கலையரசன் said...

அண்ணே, சோழியன் குடுமி சும்மா ஆடி எங்கையும் கண்டிருக்கிறீங்களோ??
எல்லாம் ஒரேகுட்டையில் ஊறின மட்டையள் தான்.
கலையரசன்

ராம் said...

பத்மநாதன் அவர்கள் இந்தியா இல்லாமல் இலங்கைக்கு ஒரு தீர்வில்லை என்பதைதான் அப்படிச்சொல்லியிருக்கிறார் என்றெண்ணுகின்றேன். இது விதண்டாவாதத்திற்கான நேரமல்ல.
ராம் பிரசன்னா

வரன் said...

உண்மையில்,பிரபாகரன் இறந்துவிட்டார் எனச் சுடச் சுட இந்தியப்பத்திரிகைக்குப் பேட்டிகொடுக்கின்ற பத்மனாதன் ஏன் தலைவருக்கு ஒரு அஞ்சலிச் செய்தியோ அல்லது கண்ணீர் அஞ்சலிக்கூட்டத்தையோ நடத்தவில்லை. அவ்வளவு கேவலமா உங்கள் தலைவரு?????????
வரன்

vipula said...

Why Vaiko doesn't try to create an eelam within Tamil Nadu where most of the people are Tamils unlike Sri Lanka.Sri Lanka just like a vegitable soup that has different flavours which cannot be seperated.In short we are Sri Lankan and very sory that the tamil eelam would never ever be exist in Sri Lanka.If they really want they can try some where else.
vibula

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter