Sunday, September 20, 2009

பசி, இது ஒரு பாவப்பட்ட இனத்திற்குப் பார் ஈந்த பரிசு!

வீடுகள் வாசல் விளைநிலங்கள் யாவினையும்
குரங்கின் கை மாலையெனக் குலைத்தெறிந்த பெரு அவலம்!
எங்கள் வயலெல்லாம் எலும்பே நிறைகிறது.
காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்ட ஜனங்களையும்
சாப்பாடும் இல்லாமல் தவித்திருக்கும் வாழ்வினையும்
கால்கை முறிந்தவரும் கழுத்தெலும்பு முறிந்தவரும்
நிணநீர்ப் பெருக்கினுள்ளே நிலைகுலைந்து போனவரும்...
தலை சிதறிப்போனவரும்...
தடுமாறிப் போனவரும்...
மணல் சிதறிப் போவதைப்போல்
தமிழ் மானிடங்கள் சிதைகையிலே
கூப்பாடுபோட்டும் குரல் கொடுத்தும் பார்த்ததற்கு
எந்த நாட்டாரும் உதவாமல் நம்மையே கொன்றொழித்தார்.......

பசி, இது ஒரு பாவப்பட்ட இனத்திற்குப் பார் அளித்த பரிசு!!!!


1 comment:

பி.குலேந்திரன் said...

எம் மனிதரின் வலி கண்டும் ஏதும் செய்ய முடியவில்லையே எம்மால்.
பி குலேந்திரன்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter