குரங்கின் கை மாலையெனக் குலைத்தெறிந்த பெரு அவலம்!
எங்கள் வயலெல்லாம் எலும்பே நிறைகிறது.
காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்ட ஜனங்களையும்
சாப்பாடும் இல்லாமல் தவித்திருக்கும் வாழ்வினையும்
கால்கை முறிந்தவரும் கழுத்தெலும்பு முறிந்தவரும்
நிணநீர்ப் பெருக்கினுள்ளே நிலைகுலைந்து போனவரும்...
தலை சிதறிப்போனவரும்...
தடுமாறிப் போனவரும்...
மணல் சிதறிப் போவதைப்போல்
தமிழ் மானிடங்கள் சிதைகையிலே
கூப்பாடுபோட்டும் குரல் கொடுத்தும் பார்த்ததற்கு
எந்த நாட்டாரும் உதவாமல் நம்மையே கொன்றொழித்தார்.......
பசி, இது ஒரு பாவப்பட்ட இனத்திற்குப் பார் அளித்த பரிசு!!!!
1 comment:
எம் மனிதரின் வலி கண்டும் ஏதும் செய்ய முடியவில்லையே எம்மால்.
பி குலேந்திரன்
Post a Comment