Thursday, July 24, 2008

கறுப்பு ஜூலை


கறுப்பு ஜூலை
உங்களால் நினைவு கூர முடிகிறதா??

உங்களால் நினைவு கூர முடிகிறதா?
'மோதரை'க்கடல் முனையில்
மிதந்து கொண்டிருந்த
மோதிர
விரல்களில்லாத கைகளை....

மண்டையோடும்
வெள்ளைப் பற்களும்
மட்டுமே
எஞ்சிக் கிடந்த - ஏதுமறியா
தமிழனின் வதிவிடங்களை.....

சப்பாத்து
ஆணிகளைத் தவிர,
மற்றவை யாவும்
எரிந்து போன
சாம்பல் மேட்டை...

ஆபாசப் பண்டங்களை
வெளியேபிதுக்கிய
குறுக்குக்கட்டோடு
சிங்களப் பெண்ணும்,
சிப்பாயுமாகச்
சுமக்கமுடியாமற்
சுமந்து சென்ற
தமிழனின்.....
தட்டு முட்டுச் சாமான்களை...

களனியாற்றில்
கரைந்தோடிய
தமிழனின் குருதியை.....
"ஸ்ரீ சித்தார்த்த பாத்" தினில்
சிதைக்கப்பட்ட என்
செந்தமிழரசியை.....

சகோதர
முண்டங்களின் மேல்
இரத்தச் சேற்றில்
கால்கள் புதையப் புதைய
உயிருக்காக ஓடிய
அந்தக் கொடிய ஆடியை....

உங்களால்
நினவு கூர முடிகிறதா??

ஒரு இருப்பின் தொலைவு
(மா.சித்திவினாயகம்)

கறுப்பு ஜூலை!!
கறுப்பு ஜூலை நினைவு எழுச்சி நிகழ்வுகள் உலகெங்கும், தமிழர்வாழும் நிலங்களெங்கும் மிக உணர்வோடு உணர்ச்சிபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்பாக உள்ள ரசல் செனட் சதுக்கம் உட்படஉலகின் மூலை முடுக்கெங்கணும் நினைவெழுச்சி நிகழ்வுகளும் அமைதி வணக்க நிகழ்வுகளும் இடம்பெற்றவண்ணமுள்ளன. இலங்கையரசின் கடும் எதிர்ப்புகளின் மத்தியிலும் இந் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தவண்ணமுள்ளன.தமிழர் வாழ்வில் என்றும் ஆறாத வடுவை மாறாத புண்ணை ஆழமாக ஏற்படுத்திய துன்பியல் நிகழ்வு என வர்ணிக்கப்படுவது 83 ஆடிக் கலவரம். காருண்ய சீலரான புத்தரின் உயர்ந்த நெறி பிரவகித்த இலங்கைத் தீவில், மனிதத்துவமற்ற மிருகத்தனமும், நாகரிகமற்ற கொடூரமும், முரட்டுத்தனம் மிக்க மிலேச்சத்தனமும் நிறைந்த இரத்தவெறி கட்டவிழ்த்து விடப்பட்டு 25 ஆண்டுகள் பறந்தோடி விட்டன. கொழும்பினில் கணக்கியல் படிப்பை நான் மேற்கொண்டிருந்த வேளையில் தான் இந்த இனக்கலவரம்{1983 ஜூலை} இடம்பெற்றது. இந்த இனக்கலவரத்திலிருந்து அதிஸ்டவசமாக நான் தப்பித்துக் கொண்டேன். அந்த நாட்களை அசை போட்டுப் பார்க்க முனைகிறேன்,என்னால் முடியவில்லை.என்னுடன் கூட இருந்த பலரும் அக்கோரச் சம்பத்தில் சிக்குண்டு போயினர். இது இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக் கலவரமல்ல. இதற்கு முன்னரும் இத்தீவில் 1956, 1958, 1974, 1977,1979, 1981 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாகப் பல கலவரங்கள் தமிழர்களுக்கு எதிராகத் தாண்டவம் எடுத்து ஆடின.அவ்வப்போது, தமிழர்களுக்கு எதிராக வெடித்த இந்த இனக் கலவரங்களை தமிழர், சிங்களவர் ஆகிய இரு இனத்தவருக்கும் இடையே நிலவிய வெறும் இனப்பகை உணர்வின் வெளிப்பாடாகத் தானாகவே கிளர்ந்து வெடித்த வன்செயல்கள் என்று மட் டும் கருதிவிடவோ, அடையாளப்படுத்தி விடவோ முடியாது.தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கொடூர வன்முறைப் புயல்களும், வெறியாட்டங்களும் பெரும்பாலும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டமிட்டு ஏவப்பட்டவையாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1983 ஆடிக் கலவர மும் இதற்கு விதி விலக்கல்ல.1983 ஜூலை கலவரம் வெடிக்க முன்னரே அதற்கு முந் திய ஜூன் மாதத்திலேயே வவுனியா, திருகோணமலை போன்ற தமிழர் தாயகப் பகுதிகளிலும், மலையகத் தமிழர்களின் வாழி டங்களிலும் தமிழர்களுக்கு எதிரான வெறியாட்டங்கள் ஆரம் பித்துவிட்டன. டசின் கணக்கான தமிழர்கள் வெட்டிச் சாய்க் கப்பட்டனர். நூற்றுக் கணக்கில் வீடுகள், வாசல்கள், கடைகள், ஆலயங்கள் எரித்துச் சாம்பராக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல தமிழ் இளைஞர்கள் சீருடையினரால் கொன்றொழிக்கப் பட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலை நடவடிக்கை அக்காலகட்டத்தில், 83 ஜூனி லேயே ஆரம்பமாகி விட்டது. அது 83 ஜூலையில் உச்சம் பெற்று ஆறு நாள்கள் இலங்கைத் தீவு எங்கும் தலைவிரித்தாடியது.யாழ்., திருநெல்வேலியில் ஜூலை 23இல் புலிகளின் தாக்கு தலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து திருநெல்வேலியிலும், கந்தர்மடத்திலும் இனவெறிச் சன்னதம் ஆடியது சிங்கள இராணுவம். அறுபது பொதுமக்கள் அங்கு சீருடை யினரால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர்.அதன் பின்னர், முன்னெப்போதும் இடம்பெற்றிராத குரூர மாக கொடூர இனவன்முறையாக இலங்கைத் தீவு எங்கும் கலவரம் விஸ்வரூபம் எடுத்து இரத்தப் பிரளயமாக வெடித்தது. தட்டிக் கேட்பாரின்றி இனவெறியாட்டம் தலைநகர் கொழும்பி லும், ஏனைய தென்னிலங்கைப் பிரதேசங்களிலும் அலை அலையாகச் சீறிப் பரவியது. தமிழரின் குருதி ஆறாய்ப் பெருக் கெடுத்தோட அவர்களின் சொத்துகளும், உடைமைகளும், உடலங்களும் தீயில் கருகின.பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழ ருக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான வீடுகள், கட்டடங் கள், மண்டபங்கள், எரிபொருள் நிலையங்கள், வர்த்தக மையங் கள் என்பன சூறையாடப்பட்டு பின்னர் எரித்து கரிமேடுகள் ஆக்கப்பட்டன.இந்த இனக் கலவரத்தில் பேரினவாத ஆட்சியாளர்களின தும், அரசியல் பிரமுகர்களினதும், அரச அதிகாரிகளினதும் கறை பட்ட கரங்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தமையைச் சரித் திரம் பகர்கின்றது.தமிழர்களின் இன அடையாளத்தைக் குறிவைத்து தமிழர் களின் உயிர்கள், உடைமைகள், பொருளாதார வாழ்வு ஆகிய வற்றை அழிப்பதோடு சிங்களக் காடைத்தனம் அடங்கி விட வில்லை.தமிழரின் இருள் படிந்த வரலாற்றுக் காலத்தின் அருவருக் கத் தக்க மிகப்பெரும் கொடூரம் இதே காலத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் அரங்கேறியது. சிங்களக் கைதிகளும், சிங் களச் சிறைக்காவலர்களும் கூட்டுச் சேர்ந்து சிறைக் கூண்டு களை உடைத்து, நிராயுதபாணிகளான 35 தமிழ் அரசியல் கைதி களைக் கண்டதுண்ட மாக வெட்டி, குரூரமாக அவர்களது உட லங்களைக் குத்திக் கிழித்துச் சிதைத்துச் சரித்து அட்டூழியம் புரிந்து தமது மிருகத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.தமிழினத்துக்கு இவ்வளவு மோசமான கெடுதியை ஏற் படுத்திய கறுப்பு ஜூலை கலவரம் “பேரழிவிலும் ஒரு நன்மை’ என்பது போல தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற் றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தி, கௌரவமான வாழ் வுரிமை குறித்து அவர்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றையும் பெற்றுத் தரவும் தவறவில்லை.தமிழர்களுக்குப் பேரழிவைத் தருகிறோம் என்ற முனைப்போடு பௌத்தசிங்களம் கறுப்பு ஜூலையில் விதைத்த வினையின் விளைவை இன்றும் அது அறுத்துக் கொண்டிருக் கின்றது.இனக் கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக சிங் களம் புரிந்த பல் பரிமாண ஒடுக்கு முறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பாரதூரமான பல விளைவுகளை ஏற்படுத்தியது. இலங் கைத் தீவில் இன முரண்பாட்டை அது மேலும் கூர்மையடைய வைத்தது. இரு தேசியங்களின் மையமான இலங்கைத் தீவில் தமிழர் தேசம், சிங்கள தேசம் ஆகிய இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை இது அசாத் தியமாக்கியது. தமிழ் மக்களிடையே விடுதலை நோக்கிய தீவி ரப் போக்கையும், போராட்ட உணர்வையும் அது வலுப்படுத்தியது. தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் முழு அளவில் தோற்றம் கொள்வதற்கான ஒரு புற நிலையை இது உருவாக்கியது.சுருங்கக் கூறுவதானால் அரச ஒடுக்குமுறையின் உச்சக் கட்ட வடிவமாக உருப்பெற்ற ஆடிக் கலவரம், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட் டத்தை பிறப்பெடுக்க வைத்து உருக்கொடுக்கக் காலாயிற்று.இந்த இனக்கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம், சிங்கள இனவாத சக்திகள் தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியை உருப்பெற வைத்த துடன் தனியரசுப் போராட்டம் வீறுகொண்டு எழுவதற் கான அக, புறச் சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தன. குள்ள நரி' என அழைக்கப்படும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் நெறிப்படுத்தலில் அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்கவின் வழிநடத்தலிலுமே படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.கொழும்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்ற வெறியில் நடத்தப்பட்ட இந்த இனக்கலவரம் என்கின்ற இன அழிப்பில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (அப்போதைய பெறுமதி) பெறுமதியான தமிழர் சொத்துகள் அழிக்கப்பட்டதுடன் ,2,500 இற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டனர். உயிர் தப்பியோர் கப்பல்களில் ஏற்றப்பட்டு தமிழர் பகுதிகளான, வடக்கு கிழக்கிற்கு அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டனர்.1983 ஜூலை 23 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை 4 நாட்கள் தொடர்ந்து நீடித்தது. தமிழர்கள் வீதி, வீதியாக விரப்பட்டு வெட்டியும், சுட்டும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். பலர் குடும்பம் குடும்பமாக வீடுகளுடன் சேர்த்து கொளுத்தப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழரின் வர்த்தக நிலையங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு நீர்மூலமாக்கப்பட்டன.
4 நாட்களாக கொழும்பு வீதிகளில் தமிழர்களின் இரத்த ஆறு ஓடியது. அவலக்குரல்கள் உலக நாடுகள் வரை கேட்டபோதும் அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன மட்டும் மிகவும் அமைதியாக சிங்கள காடையர் கூட்டத்தின் கொலை வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்பு படைகளோ தமக்கிடப்பட்ட கட்டளையின் படி கொலைத்தாண்டவம் புரிந்த காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தன.
இனப்படுகொலைகள் நடந்து கோரமான ஐந்து நாட்களுக்கு பின்னரே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இனக்கலவரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் விளக்கமளித்தார்.
தொலைக்காட்சி உரையில் கூட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் ஜே.ஆர். வருத்தமோ, கவலையோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. மாறாக இனப்படுகொலையை நியாயப்படுத்தியே அவரது கருத்துகள் அமைந்திருந்தன.
1956 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட நம்பிக்கையின்மை காரணமாகவே இனக்கலவரம் வெடித்ததாகவும் இவ்வாறான மனக்கசப்புகள் இருக்கும் போது சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயல் என்றும் ஜே.ஆர். இனப்படுகொலையை நியாயப்படுத்தினார்.
அத்துடன் சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காக தான் புதிய சட்டமொன்றை அமுலாக்குவதாக ஜே.ஆர். கூறினார். ஜே.ஆர். பின்வருமாறு கூறுகிறார்,
சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்களுடைய இயல்பான வேட்கையை பூர்த்தி செய்வதற்காகவும் நான் ஒரு புதிய சட்டத்தை அமுலாக்குகிறேன். இப்புதிய சட்டத்தின் படி நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்களாக முடியாது. அது மட்டுமன்றி நாட்டுப் பிரிவினை கோரும் எந்தவொரு கட்சியும் தடை செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது தொடர்பாக எவரும் சட்ட ரீதியாக செயற்பட முடியாது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கவே கொழும்பில் 2,500 இற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஜே.ஆர். தனது புதிய சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கும் சாவுமணி அடித்தார்.
ஜே.ஆரின் அப்போதைய செல்லப்பிள்ளையான காமினி திசாநாயக்க தனது இனவெறியை பின்வருமாறு வெளிப்படுத்தினார்.
"உங்களை தாக்கியது யார்? சிங்களவர்கள். உங்களை காப்பாற்றியது யார்? சிங்களவர்கள்'. ஆமாம், எங்களால் தான் உங்களை தாக்கவும் முடியும் காப்பாற்றவும் முடியும். உங்களை காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை. ஆனால், 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும் இந்த நாட்டிற்காக அர்ப்பணிப்போம்.
உங்களுடைய நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ மட்டக்களப்பு தமிழன் என்றோ, மலையகத் தமிழன்தான் என்றோ இந்துத் தமிழன் என்றோ கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை. நீங்கள் எல்லோரும் தமிழர்கள் தான் என்று முழங்கியிருந்தார்.
இந்த கறுப்பு ஜூலையே தமிழர்களுக்கு சர்வதேச ரீதியில் ஒரு அங்கீகாரத்தை கொடுக்கப் போகின்றதென்பதை ஜே.ஆரோ, காமினி திசாநாயக்கவோ அறிந்திருக்கவில்லை.
1983 ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று `நியூயோர்க்-வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியது.`தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வது கடினமென்றால் ஏன் பிரிந்து வாழமுடியாது? தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன? ஐ.நா.வில் உள்ள பல நாடுகள் போல் தமிழ் மக்களும் தாங்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதற்குரிய சரியான சான்றுகளை வைத்துள்ளார்கள்.
இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் சிங்களவர் மட்டுமே அதிகாரங்களை வைத்திருக்கின்றார்கள். இந்த அதிகாரங்களை கொண்டுள்ள சிங்களவர்களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங்கைத் தீவில் வாழ முடியாத அளவில் நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற அறிவாவது உள்ளதா? என கேள்வியெழுப்பியிருந்தது.
ஆனால், அந்த அறிவு இன்று வரை சிங்களவர்களுக்கு வரவில்லை என்பதையே நடந்து வரும் நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.1983 ஜூலையில் குறிப்பிட்ட 4 நாட்களுக்குள் ஐ.தே.க. நடத்திய வெறியாட்டத்தை தற்போதைய மகிந்த அரசு சற்று வித்தியாசமாக நடத்தி வருகின்றது. மகிந்த ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள. நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு அவசர கால தடைச் சட்டத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.தே.க. தனது இன வெறியாட்டத்தின் போது தமிழ் மக்களின் பொருளாதாரத்தையே இலக்கு வைத்து அழிந்தது. அதே திட்டத்தையே மேற்கொண்டு வரும் தற்போதைய அரசு அதையும் சற்று வித்தியாசமாகவே செய்கிறது.
அதாவது கொழும்பிலுள்ள பிரபல தமிழ் வர்த்தகர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, கோடிக்கணக்கான ரூபா கப்பம் பெறப்படுகின்றனர். சிலர் கப்பப் பணம் கொடுத்தும் இதுவரை வீடு திரும்பவில்லை. சில வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் பயங்கர நிலைமையில் தமிழ் வர்த்தகர்கள் சுதந்திரமாக தமது தொழிலை நடத்த முடியாதுள்ளனர். பலர் தமது தொழில்களை கைவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் தமது வர்த்தக நடவடிக்கைகளை வெகுவாகக் குறைத்து விட்டனர். எவ்வேளையிலும் தாம் கடத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாமென்ற அச்ச நிலையில் வர்த்தகர்கள் உள்ளனர். இதனால் வர்த்தகத்தில் முதலீடுகளை செய்ய முடியாதுள்ளனர்.
ஐ.தே.க. காடையர் கூட்டத்தை வைத்து செய்த வேலைகளை மகிந்த அரசு வெள்ளை வான்களையும் `கஜநாயக்கா'க்களையும் வைத்து செய்கின்றது.அண்மையில் இரவோடு இரவாக கொழும்பு லொட்ஜ்களிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை மகிந்த அரசிலுள்ள ஜே.ஆர்.ஜெயவர்தனாக்களை மீண்டும் அடையாளம் காட்டும் நிகழ்வாகவே அமைந்தது.
அப்போது ஜே.ஆர். ஜெயவர்தனவின் இனவெறிக்கு அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி, சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றோர் பக்கபலமாக இருந்து அட்டூழியங்களை அரங்கேற்றியது போல் இன்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அவரின் சகோதரர்களும் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, ஹெகலிய ரம்புக்வெல போன்றவர்களும் பக்கபலமாக செயற்படுகின்றனர்.
1983 கறுப்பு ஜூலைக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மன்னிப்புக் கோராததைப் போல் கொழும்பிலிருந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்துக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எவ்வித மன்னிப்பையும் கேட்கவில்லை. அதிசயமாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மன்னிப்புக் கோரினார். ஆனால், அந்தத் தவறை நிவர்த்திப்பது போல் பிரதமர் மன்னிப்புக்கேட்பது தவறென குற்றம்சாட்டி சிறுபான்மையின அமைச்சரான ஜெயராஜ் தனது அரசு விசுவாசத்தை நிரூபித்தார்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து பல நூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தி ஒரு இலட்சம் வரையான தமிழர்களை அகதிகளாக்கி கோடிக்கணக்கான சொத்துக்களை நாசமாக்கி விட்டே தொப்பிகல எனப்படும் குடும்பிமலையை இராணுவத்தினர் கைப்பற்றினர்.
தமிழ் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி குடும்பிமலையை கைப்பற்றிய அரசு அதனை பெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடி புளகாங்கிதம் அடைந்தது. இலங்கையின் இன்னொரு சுதந்திர தினமாக, இன்னுமொரு எதிரி நாட்டை கைப்பற்றிய வெற்றிவிழா போன்று இலங்கையின் கிழக்கிலே உள்ள சிறு வனாந்தர பகுதியான குடும்பிமலையை கைப்பற்றியது வெற்றிவிழாவாகக் கொண்டாடி தன்னை தரம் தாழ்த்திக் கொண்ட மகிந்த அரசு இனவெறியை மட்டும் தூபமிட்டது.
எனவே, 1983 ஆம் ஆண்டைப் போன்றதொரு அரசே அரியாசனத்தில் இருப்பதாலும் இன வெறியும், மதவெறியும் கொண்ட கட்சிகள் அரசுக்கு ஆதரவு கொடுப்பதாலும் மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் நிறையவேயுள்ளன என்கின்றார்கள் அரசியல் ஆய்வாளர்களும்அவதானிப்பாளர்களும்.
நன்றி: தமிழர் இணய வலைகளுக்கு..

கவனிப்பிற்கு:
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் ஜூலை 1983 இல் இலங்கையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.[3].
வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைகக்ப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3 B3 C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையில் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்த அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாகும். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள்.
இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி சிங்களக் கைதிகள் தம்மிடம் இருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.

5 comments:

சுதேசன் said...

thans for ur remember, its never forget frm our mind, you should
feed more abt this Disaster wia blog and welcome 2 blogspot.

Anonymous said...

keep it up.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

நண்பர் சுதேசன் அவர்களுக்கு
உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. தமிழ்சித்தன்

Anonymous said...

உண்மையில் தமிழர் வாழ்வின் கொடிய நாட்கள் அவை.இன்னமும்
தொடர்கிறதே அவ் அவலங்கள்.பதிவிற்கு நன்றி.

mayan said...

பதிவிற்கு நன்றி

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter