Wednesday, March 25, 2009

ராஜிவ்காந்தியின் சவக்கிடங்கில் ஊற்றப்படப்போகும் தமிழர்களின் இரத்தம்.



ராஜிவ் காந்தியின் சவக்கிடங்கில் ஊற்றப்படப்போகும் தமிழர்களின் இரத்தம்.
தமிழினத்தை முற்றாக அழிக்கும் தறுவாயில் இந்திய இராணுவம்:

'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!''



''சிங்கள இராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது.

அதனால் இந்திய இராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறது. இந்தப் படைகள் ஒருசேர முல்லைத்தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன.

'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசு, தன்னுடைய இராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இந்திய இராணுவம்... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய இராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம், விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள்.
. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில், இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் இரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழு, ஒரு மருத்துவமனையையே நிறுவியது.
இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயக, 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல், 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.
சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த இராணுவ அதிகாரி ஒருவர், 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய இராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதைய போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார்.
இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள், இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.
''சிங்கள இராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய இராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய இராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத்தீவுக்கு அருகே நிற்கிறது.
இந்தப் படைகள் ஒருசேர முல்லைத்தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால், இந்திய இராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள்.
இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன், 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடி, 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள இராணுவம்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.
'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில், ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர் ம்க்கள்.
ஆனால் காங்கிரஸ் அரசோ, ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது. மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?

அப்பாவை (ராஜீவ்காந்தி) கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’: ராகுல்காந்தி
புதுச்சேரி மாநில காங்கிரசாருடன் தேர்தல் ஆலோசனைகள் நடத்துவதற்காக இன்று புதுச்சேரி வந்துள்ளார் ராகுல்காந்தி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி இல்லை. இக்கூட்டத்திற்கு பின்னர் வெளியே ராகுல்காந்தியிடம் தந்தையை விடுதலைப்புலிகள் கொன்றதாக இருக்கும் வழக்கு பற்றியும், ஈழப்பிரச்சினையை பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கிட்டிருக்கு. அப்பாவை கொன்ற வழக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இப்போதும் எடுத்துக்கிட்டிருக்கு’’ என்று தெரிவித்தார்.
"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம். அதுவே என்னுடையத் தந்தையையும் கொன்றது என்பதால் அதன் மீது துளியும் பற்றின்றி இருக்கிறேன்" என்றார்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து கேட்டதற்கு "இலங்கை தமிழர்களை மத்திய அரசு கைவிடாது. அவர்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்" என்றார் அவர்.

தற்காலிக யுத்த நிறுத்தம் செய்ய ஆயர்கள் ஐவர் கூட்டாகக் கோரிக்கை:
முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ளவர்களில் வெளியேற விரும்புபவர்கள் வெளியே செல்ல வசதியாகவும், அங்கு தங்க விரும்புபவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வசதியாகவும் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இணங்க வேண்டும்.ஐந்து ஆயர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆயர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ள நான்கு கோரிக்கைகள் வருமாறு:
* உலக உணவுத் திட்ட அமைப்பின் உணவு விநியோகம் தொடர அனுமதிக்க வேண்டும்.
* காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு செல்ல வசதியாக கப்பல் சேவையை தொடர்ந்து நடத்த வேண்டும்.
* பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேற வசதியாக தற்காலிக யுத்த நிறுத்தம் செய்யவேண்டும்.
* அந்த யுத்த நிறுத்த காலத்தில் ஐ.நா., செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு மற்றும் தகுதியான நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் மதகுருமார்களும் மோதல் இடம்பெறும் பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
அதிவண. தோமஸ் செளந்தர நாயகம் (யாழ்ப்பாணம்), அதிவண. ராயப்பு யோசப் (மன்னார்), அதிவண. நேபேட் அன்றாடி (அனுராதபுரம்) ஆகிய கத்தோலிக்க ஆயர்களும், அதிவண. குமார இலங்க சிங்க (குருநாகல்), கொழும்பு ஆயர் அதிவண. டுலில் டி சிக்கேரா ஆகிய அங்கிலிக்கன் ஆயர்களும் அந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter