Monday, April 06, 2009

ஒட்டாவா நாடாளுமன்றம் !!

கனடா ஒட்டாவா நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சிக்கு அழைப்பு !


சிறிலங்கா அரசின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும்
உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும், சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு
கனடிய அரசையையும், மாண்புமிகு பிரதமர் ஸ்டிபன் காப்பர் அவர்களையும் வற்புறுத்தி கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகம் இணைந்து முன்னெடுக்கும் தொடர் போராட்டம்.ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடா நாடாளுமன்றம் முன்பாக பேரெழுச்சி மிக்க தொடர் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது.
ஏப்ரல் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 முதல்
நாள் தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
நாள் தோறும் காலை 7.00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து பேரூந்துகள் புறப்படவுள்ளன.
பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர்பெண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
சுயமாக வாகன வசதி கொண்டுவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றார்கள்.
பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
பேருந்துப் பதிவுகளுக்கு:- 416 825 6020
ஏனைய தொடர்புகளுக்கு:- 647 838 6925
போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தொடர்புகளை இலகுபடுத்த விரைவில் ஏனைய தொடர்பெண்களையும் அறியத் தருவார்கள்.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter