தமிழர் தலைவிதியைக் கொல்லும் கோணங்கிகளும்... அவர்களின் கூத்துக்களும் .....
ஜனநாயக தமிழ் விடுதலை கூட்டணி என்ற ஈபிஆர்எல்எப் வரதர் அணி, புளொட் மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி,மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்பன யாழ்ப்பாண மாநகர சபைத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்ச, மற்றும் அவருடைய மகன் நாமல் ராஜபக்ச,பிரதமரின் பாரியார் குசும் விக்ரமநாயக்க, கடற்படைத் தளபதியின் பாரியார் திருமதி கரன்னகொட ஆகியோர் நேற்று காலை யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
மாதகல் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, புத்த ஆலயத்தில்,இலங்கைக்கு முதன் முதல் வந்தவரும் அசோகா மன்னரின் மகளுமான சங்கமித்தவின் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காகவே இவர்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்
மாதகல்லில் உள்ள ஒரு சிறிய தமிழ் கிராமத்திலேயே சங்கமித்தா முதன் முதலில் தரையிறங்கியதாக தற்போது உரிமை கோரப்படுகிறது
பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு ஆலோசனை கோருகிறார்
செ.பத்மநாதன்
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.
சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து - ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் - தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.
தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.
சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது.
யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும்.
நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.
இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம். மின்னஞ்சல் முகவரி: prdinternational@gmail.com
பிரபாகரனைப் பற்றிய படம் எடுக்கும் முயற்சியில் பலர் படுவேகமாக முயற்சிப்பதாகவும் இம் முயற்சியில்
தமிழரல்லாத பலர் பணம் சம்பாதிக்க முயற்சிப்பதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமாந்த தமிழனே தமிழனைத் தமிழனே படம் எடுக்கக்கூட வக்கில்லையா??
இவர்களை மிஞ்சிய இந்தியத் தேர்தல் கோணங்கிகளை உருவாக்கிய நிஜக் கோடங்கிகளை இங்கே தரிசியுங்கள்
குறி சொல்லும் கோடங்கிகளும்..அவர்களின் கோட்பாடுகளும்....
5 comments:
எரியிற வீட்டில எப்ப புடுங்கித் தின்னுவம் எண்ணு காத்துக்கிட்டிருந்தவங்கள் கிளம்பிட்டாங்கோ?? இனி நாடு உருப்படுமா??
துரை
தமிழர் தலைவிதியைச் சொல்லும் கோடங்கிகள் என்று எதிர் பார்த்தால் அதுகள் கொல்ல வழிசொல்லுதுகள்.
அடா பாவமே...
சங்கரி புள்ளயும் கனடாவில் தேர்தலில நிற்கப் போறதாயும் அதுக்கு வேறமாதிரி முயற்சி பண்ணுறதாயும் கதைக்கினம்.உண்மையோ??/
தேவன்
nice vidio clip . I live same village.
puvanan
தமிழரைத் தமிழரே தின்கிற வேளை.
யாரை யார் நம்புகின்றதென்றும் எப்படி நம்புவதென்றும் தெரியாமல் தத்தளிக்கின்ற வேளையிது.உண்மையாளர்களென்றும் ,உண்மையில் நாட்டுப்பற்றாளர்களென்றும் யாராவது உண்டா??
அல்லது மக்களை ஊறிஞ்சப் போடுகின்ற வேடங்கள் தானா??
ராஜி
Post a Comment