வாய்க்கரிசி கூட வாய்க்கவில்லை இவர்களுக்கு!!!
நாங்கள் எல்லோருமாக
ஏமாற்றி ஏமாற்றி
ஏதிலிகளாக்கியவர்
இன்று கையிழந்து,
காலிழந்து, உணர்விழந்து,
வாழ்விழந்து இங்கே
வரிசையிலே நிற்கின்றார்.
இன்னமும் இவர் பெயரில்
பொருள் சேர்த்துப்,
பெயர் சேர்த்துக்
கொடியுர்த்தி
நாங்கள் இங்கே
குதூகலிப்போம் வாருங்கள்.
No comments:
Post a Comment