Wednesday, July 15, 2009

ஓய்ந்திருந்த தமிழர்குழுக்களின் உற்சவம் மீண்டும் ஆரம்பம்.

ஓய்ந்திருந்த தமிழர்குழுக்களின் உற்சவம் மீண்டும் ஆரம்பம். இளம் தமிழர்
பரிதாபகரமாக அடித்துக்கொலை செய்யபட்டார் கூட்டாளித்தமிழர்களால்.


கனடாவில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை

கனடா, ரொறன்ரோவில் கிறிஸ்ரியன் தனபாலன் (வயது 22 என்ற தமிழ் இளைஞன் கும்பல் ஒன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ரொறன்ரோ நகரில் கிளமோர்கன் பார்க்கில் கடந்த சனிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் இறந்து விட்டார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஈளைஞன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு ரொறன்ரோவிலுள்ள தமிழ் சமூகத்திடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனபாலன் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அங்கு 23 பேரடங்கிய மற்றொரு குழுவினரும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி பொலிஸ் சார்ஜன்ட் சாவாஸ்கிரியாகூ கூறியுள்ளார்.

இந்த இரு குழுவினருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மற்றைய குழுவினர் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்ட போதும் பின்னர் அவர்கள் திரும்பி வந்ததாகவும் நள்ளிரவில் இரு குழுக்களும் சண்டையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபாலும் நண்பர்களும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இரு குழுவினரும் தமிழர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter