குட்டக் குட்டக் குனியாதே !!
ஊரும் உறவும் பேரும் - துறந்து
உலகமெங்கும் ஓடுகிறாய் - நீ
நாலும் தெரிந்த மனிதன் எனவே
நம்ப மறுத்து வாடுகிறாய்.
இருட்டுவழியினில் குருடன் காட்டிய திசையின்
பாதையில் ஓடுகிறாய் - அவன்
குருட்டுக்கண்ணால் இருட்டைத் துளைத்து
ஒளியைக்கொடுப்பான் என்கின்றாய்
ஏய்த்துப்பிழைக்கும் கூட்டத்தோடு
எட்டி நடந்தே போகின்றாய் - நீ
தட்டிக் கேட்கும் திராணி இழந்து
தலையைக் குனிந்தே நடக்கின்றாய் !
குட்டக் குட்டக் குனிகின்றாய் - நீ
கூனிக்குறுகி நடக்கின்றாய்.
தப்புச் செய்யும் தரகர் கூட்ட
கைப்பொம்மையாய் ஆடுகிறாய் !
நாளும் பொழுதும் உனை ஏய்த்து....
நட்ட மரமாய் உனை ஆக்கி....
கோவில் குளங்களைக் கட்டுகின்றார் - சிலர்
கொடிபிடியென்று அதட்டுகின்றார்.
செத்துக்கிடப்பவன் மாலைக்காய் -சிலர்
சிரித்துக் கொண்டே நடக்கின்றார்.
விருதுக்காக மானிடரைச் சிலர்
வேட்டையாடித் திரிகின்றார்.
ஆங்கிலத்தாய்க்குப் பிறந்தவர் போல்
அன்னிய மொழியில் பேசுகின்றார்
எம்மரும் தமிழின் கருவறையில் - எரி
தீயை மூட்டி மகிழ்கின்றார் !
ஊரும் உறவும் பேரும் - துறந்து
உலகமெங்கும் ஓடுகிறாய் - நீ
நாலும் தெரிந்த மனிதன் எனவே
நம்ப மறுத்து வாடுகிறாய்.
இருட்டுவழியினில் குருடன் காட்டிய திசையின்
பாதையில் ஓடுகிறாய் - அவன்
குருட்டுக்கண்ணால் இருட்டைத் துளைத்து
ஒளியைக்கொடுப்பான் என்கின்றாய்
ஏய்த்துப்பிழைக்கும் கூட்டத்தோடு
எட்டி நடந்தே போகின்றாய் - நீ
தட்டிக் கேட்கும் திராணி இழந்து
தலையைக் குனிந்தே நடக்கின்றாய் !
குட்டக் குட்டக் குனிகின்றாய் - நீ
கூனிக்குறுகி நடக்கின்றாய்.
தப்புச் செய்யும் தரகர் கூட்ட
கைப்பொம்மையாய் ஆடுகிறாய் !
நாளும் பொழுதும் உனை ஏய்த்து....
நட்ட மரமாய் உனை ஆக்கி....
கோவில் குளங்களைக் கட்டுகின்றார் - சிலர்
கொடிபிடியென்று அதட்டுகின்றார்.
செத்துக்கிடப்பவன் மாலைக்காய் -சிலர்
சிரித்துக் கொண்டே நடக்கின்றார்.
விருதுக்காக மானிடரைச் சிலர்
வேட்டையாடித் திரிகின்றார்.
ஆங்கிலத்தாய்க்குப் பிறந்தவர் போல்
அன்னிய மொழியில் பேசுகின்றார்
எம்மரும் தமிழின் கருவறையில் - எரி
தீயை மூட்டி மகிழ்கின்றார் !
1 comment:
that"s great poem.
thanks
susan
Post a Comment