Wednesday, October 21, 2009

போலிகள்.!!

போலிகள்.




கவிஞனே !

கோவணமும்,எழுதுகோலுமாய்- நீ

தேடிய செல்வத்தைக்,

கறையான் புற்றிற்குள்.......

தொலைத்தாயிற்று.



இன்று,

மிச்சமிருக்கிற வெள்ளைத்தாள்களைத் தேடி,

கறையான் புற்றைக் கிளறிக் கொண்டிருக்கிறேன்...

மரித்த மானிட மறைவிடம் மூட............




எதுகை,மோனை,யாப்பு,மரபு,சொற்றிறன்

போட்டுக் குழைத்து........

பாலியல் வன்மையை இனவாதம்,மதவாதம்

பூசாமல்........

மயிற்ப்பீலி கொண்டு மெல்லத்தடவி......

வார்த்தைகள் தேடி,வடித்தெடுத்த - உந்தன்

சமாதான வெள்ளைக் கவிதைககளத்,

தேடிக்கொண்டிருக்கிறேன்! -திக்கெட்டும்

சிதறிய பிணங்களின் மறைவிடம் மூட.......



அடா... தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ்....

துண்டுத் துணியும் மேலில் இல்லாமல்,

துடைத்து வழித்துத் துவம்சம் பண்ணி,

யோனி விரியலில் கந்தக முடிச்சை -இறுகச் செருகி

வெடிக்க வைத்த வெறியனை,

விரல் நீட்டிக் குற்றம் என்பதை,

இனவாதம் என்னும் இனிய கவிஞனே!

வாழ்க நீ ! வாழ்த்துக்கள் உனக்கு !




நீ, வட்டமாய் அமர்ந்து...

வசனம் பேசலாம்!

விமர்சனமென விளக்கமும் சொல்லலாம்!

விழுந்த பாட்டிற்கு,குறியும் சுடலாம்!

மூளைச்சலவை என்பதாய் இன்னமும்,

இயங்கியல் பேசி இறுமாப்புறலாம்!

ஒட்டுத்துணியில்லாதவனுக்குத் தானடா-ஒரு

கோவணத்தின் அருமை புரிந்து கொள்ளப் போகிறது।




கவிதை மீட்கும் தேசபக்தனே !

காலி வயிற்றுடன்,

கால்நடையாக.....

முறிகண்டி,மல்லாவி

முள்ளிவாய்க்கால் என

மாறி,மாறி உயிரை ஒளிக்க ஓடிய

மனித ஜடத்திற்கு - எதனை விடவும்

மூச்சுத் தங்கிடும் நிமிடமே.....

முக்கியம் என்பேன் !




என்னடா? இது.....

கண்முன்னாலேயே, கதறக் கதறச்....

செத்தொழிந்த அந்த எலும்புக் கூடுகளுக்காய்

இன்னமும் கூட - உன் இதயம்

கொதிக்காதிருந்தால்.......




போ... போய்.....

மிச்சமாய் இருக்கிற

யோனி விரியலில் - நீயும் அவனைப்போல்

வெடி வைத்து மகிழ் !!!!

போ... இனிய கவிஞனே!

1 comment:

thuuyavan said...

மனதை அரிக்கிற கவிதை.உண்மைகள் பல ஒளிந்திருக்கின்றன.இன்னும் இன்னும் வெளிக்கொணர்க.
தூயவன்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter