Sunday, November 22, 2009

வட்டுகோட்டைத் தீர்மானமும், வாய்ச் சவடால் வீரர்களும்......


வட்டுகோட்டைத் தீர்மானமும், வாய்ச் சவடால் வீரர்களும்......


இது தமிழர்களில் பலதரப்பட்டோரின் கருத்துக்களேயன்றி அகதிகளின் நாட்குறிப்பின் கருத்துக்களல்ல. எல்லவற்றாலும் குழம்பியுள்ள தமிழர்களை மேலும் குழப்பி அந்தக் குட்டையில் மீன் பிடிக்கத் துடிக்கும் மனிதர்களை இனம் காண்பதற்கான முயற்சி.



“1976ல் வட்டுக்கோடையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் சுய ஆட்சிபெறும் உரிமையுள்ளவர்கள் என்பதை தமிழ் பேசும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இம்மூலாதார அடிப்படை உரிமை சுதந்திர இறையாண்மையுள்ள தமிழீழம் அமைப்பதை உள்ளடக்கியதாகும். தமிழீழம் ஜனநாயக அரசாகவும் தாராளத்துவம், சமத்துவம், கலப்பு, பொருளாதார கொள்கைகளை ஏற்பதுடன் உலகசமூகத்துடன் தீவிர ஈடுபாடுடையதாகவும் அமையும்.”

வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான சர்வசன வாக்கெடுப்பு எதுவும் இதுவரை நடைபெறாவிட்டாலும், இத்தீர்மானத்தை தமது தேர்தல் வி
ஞ்ஞாபனமாகக் கொண்டு 1977 நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி போட்டியிட்டு பெருவெற்றியீட்டியது. அத்தேர்தலினை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான சர்வசன வாக்கெடுப்பாக எடுத்துக்கொள்ளுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தது. இத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு விழுந்த வாக்குகளின் அடிப்படையில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் இத்தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டுள்ளனர் எனலாம். அதே சமயம் இத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட, திரு. வ. நவரத்தினம் தலைமையிலான தமிழர் சுயாட்சிக்கழகம் மற்றும் சில சுயேட்சை வேட்பாளர்களும் தாமும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரிப்பதாக தேர்தல் பரப்புரைகளின் போது குறிப்பிட்டனர் என்பதனையும் கவனத்தில் எடுத்தால், தமிழ்மக்;களது ஆதரவு அதிகரித்த அளவில் காணப்படும். சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன் மேற்படி தீர்மானத்தையிட்டான சர்வசன வாக்கெடுப்பு ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தப்பட்டிருப்பின், அவர்களது அரசியல் அபிலாசைகள் வெளிப்படுத்தக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பம் கிட்டியிருக்கும். ஆனால் தமிழ் மக்கள் எத்தகையை முடிவுடன் இருக்கிறார்கள் என்பது இலகுவில் அனுமானிக்கக்கூடியதாக இருப்பதால், இதுபோன்ற வாக்கெடுப்பினை இலங்கைத்தீவில் நடாத்துவதற்கு சிறிலங்கா அரசு ஒரு போதும் உடன்பட மாட்டாது. ஆகவே புலம்பெயர்ந்து வாழும் பத்து இலட்சம் ஈழத்தமிழ் மக்களிடமே வாக்கெடுப்பினை நடாத்த வேண்டியுள்ளது. அதிலும், இந்தியாவில் அகதிகள் முகாம்களிலும், வெளியிலும் வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடாத்துவமதற்கும் இந்திய அரசு உடன்படும் என எதிர்பார்க்கமுடியாது. ஆகவே, ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும், அவுஸதிரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழும்


இந்த வாக்கெடுப்பினை நடாத்த வேண்டியுள்ளது.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது 1976 மே மாதம் 14 திகதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக கைக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அதாவது 1976 மே மாதம் 14ம் திகதியன்று வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் மக்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளாரென இத்தால் பிரகடனப்படுத்துகின்றது. மேலும் 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ்மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத்தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம் மொழி வாழ்வுடமை பொருளாதார வாழ்க்கை தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது. ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமயசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீழ உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வறிவித்தல் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது. உதயன் நாளிதழின் கருத்து வருமாறு இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரத்தை ஒட்டி பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து குறிப்பாகப் புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு எண்ணக்கருக்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. எவ்வகையிலான தீர்வு என்ற விடயத்தில் இடங்களின் பெயர்களை "ஆகு பெயர்களாக" குறிப்பிட்டு கருத்து வெளியிடும் சூழலும் இப்போது காணப்படுகின்றது.

ஒரு சாரார் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பார்கள்.
இன்னொரு தரப்பினர் திம்புக்கோட்பாடு என்பார்கள்.
பிறிதொரு குழுவினரோ ஒஸ்லோ கூட்டு அறிவிப்பு என்பார்கள்.


இப்படி இடங்களின் பெயரால் சுட்டப்படும் ஒவ்வொரு அம்சமும் தன்தன் நிலையில் ஆழமான கருத்து நிலைப்பாட்டைப் பிரதிபலித்து நிற்கின்றமை கண்கூடு.
"வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்பது 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதியில் உள்ள பண்ணாகத் தில் இடம்பெற்ற தமிழர் விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை குறித்து நிற்கிறது. தனித் தமிழீழம் அமைப்பதற்கான முடிவைத் தமிழினம் அந்த மாநாட்டிலேயே முதன் முறையாக உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தது. "இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு தேசத்துக்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய மத சார்பற்ற சோஷலிஸ தமிழீழ அரசு மீளப்பட்டு, மீள்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்"" என அந்த மாநாட்டின் மேற்படி தீர்மான வாசகம் கூறுகின்றது. அடுத்தது, திம்புக்கோட்பாடு பற்றியது. பூட்டான் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும் தமிழர்கள் தரப்பில் அவர்களின் விடுதலைக்காகப் போராடிய அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்த அணிக்கும் இடையில் பூட்டான் அரசின் ஆதரவுடனும் இந்திய மத்தியஸ்தத்துடனும், இடம்பெற்ற பேச்சுகள் பற்றியதே இது. திம்புப் பேச்சுகள் இரண்டு சுற்றாக நடைபெற்ற போதிலும் பொதுவாகத் திம்புக் கோட்பாடு என்பது 1985 ஜூலை 8 முதல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முதல் சுற்றுப்பேச்சின் முடிவில் தமிழர்களின் அனைத்துத்தரப்பினரும் ஒன்றுகூடி வெளியிட்ட கொள்கை விளக்கமாகும். தமிழரின் தனித்துவத் தேசியஇனம், தனியானதாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய மூன்று பிரதான அம்சம்களையும், இலங்கையில் வாழும் சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் உண்டென்ற அடுத்த விடயத்தையும் உள்ளடக்கி மொத்தம் நான்கு விசேட கொள்கைகளை திம்புக்கோட்பாடு வெளிப்படுத்தி நின்றது. இதில் முதல் மூன்றும் வடக்கு, கிழக்கு தமிழர் தொடர்பிலும் நான்காவது விசேடமாக மலையகத் தமிழர் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டன. அடுத்த விவகாரம் ஒஸ்லோ கூட்டு அறிவிப்பாகும். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 முதல் 2004 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுகள் சமயத்தில் 2002 டிசெம்பர் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுகளின் முடிவில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்ப ஏற்பாடாகத் தங்களுக்குள் ஏற்பட்ட இணக்கம் குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களையே இது பிரதிப லித்து நிற்கின்றது. "உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில், ஐக்கியமான இலங்கைக்குள், சமஷ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது."" இதுவே ஒஸ்லோ கூட்டறிக்கையின் சாரமாகும். * இந்த மூன்று முக்கிய அம்சங்களையும் தங்களின் வாதங்களுக்கு அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் அடிப்படையில் தமது தீர்வுத் திட்ட எண்ணங்களைப் பிரதிபலித்து நிற்போர் மற்றைய ஒரு விவகாரத்தையும் இன்றைய நிலையில் கவனத்தில் கொள்வது நல்லது. முதலாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம். * அது தனித்துத் தமிழர் தரப்பினால் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவு. இரண்டாவது திம்புக்கோட்பாடு. * அது ஈழத் தமிழர்களும், தென்னிலங்கை அரசுத் தரப்பினரும் இந்திய மத்தியஸ்தத்துடன் ஒரு மேடையில் இருந்து பேசியசமயம் தமிழர் தரப்பால் ஏகமனதாக அங்கு முன்வைக்கப்பட்டது. அதிலே அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை உண்டு என்ற நான்காவது கோட்பாடு தவிர்ந்த ஏனைய மூன்றையும் தமிழர்கள் தனித்துவமான இனம், அவர்களுக்குத் தனித்துவமான, விசேட பாரம்பரிய தாயகம் உண்டு, அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உள்ளது என்ற மூன்றையும் அந்தப் பேச்சுகளின் போதே கொழும்பு அரசு நிராகரித்து விட்டது. (இரண்டு ஆண்டுகள் கழித்து 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம், மேற்படி தமிழர் தரப்பின் பிரதான மூன்று கோரிக்கைகளில் சுயநிர்ணய உரிமை தவிர்ந்த ஏனைய இரண்டையும் தமிழர்கள் இலங்கையில் தனித்துவமான இனம், வடக்கும் கிழக்கும் அவர்களின் பாரம்பரிய, பூர்வீகத் தாயகம் என்ற இரண்டு கோட்பாட்டையும் கொழும்பு ஏற்றுக்கொண்டு விட்டது என்பது வேறு விடயம்.) மூன்றாவது ஒஸ்லோ கூட்டறிவிப்பு. இது, * அதில் தமிழர் தரப்பில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளும் தென்னிலங்கைச் சிங்களவர் தரப்பில் பங்குபற்றிய கொழும்பு அரசும் ஒப்புக்கொண்டு இணங்கிய விடயமாகும். ஆகவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலா அல்லது திம்புக்கோட்பாடு மீதான உறுதிப்பாட்டுடனா அல்லது ஒஸ்லோ கூட்டறிவிப்பின் போக்கிலா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சர்ச்சைப்படும் புலம்பெயர் தமிழர்களின் தரப்புகள், நாம் சுட்டிக்காட்டிய இந்த விடயங்களைக் கவனத்திலும் பரிசீலனையிலும் கொள்வது அவர்களைச் சிறந்த முறையில் வழிப்படுத்த உதவும் என நினைக்கிறோம்.(உதயன் நாளேட்டின் கருத்து)


நடக்கும் சம்பவங்கள்:


வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழர்கள் தேரும் தீர்வாக, தேர்தல் மூலம் தெரிவிப்பதற்காக கனடியத் தமிழர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தேர்தலை முன்னெடுக்கச் செயலாற்றும் பெரியார்கள், நடத்திவருகின்ற சந்திப்புக் கூட்டங்கள் நான்காவதாக ரொறன்ரோ ஜேன்-பிஞ் சந்திப்பில் இருக்கும் விமிகா மண்டபத்தில் கடந்த ஒக்ரோபர்-25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பில் பலர் கலந்து கொண்டார்கள். அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் விளக்கவுரையும், கடந்த காலச் சரித்திரங்களின் சம்பவங்களும், சிங்கள ஆட்சியாளரால் சேர்.பொன்.இராமநாதன் காலத்தில் இருந்து எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்ற விளக்கமான சம்பவக் கோர்வையோடு பலர் பேசினார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தால் உறுதிசெய்யப்பட்ட தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம், தாயகம் முதலிய கோட்பாடுகளும், இவற்றை இன்றைய இளைஞர்கள் ஏன் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற காரணங்களையும் சம்பவத் தொகுப்புகளை எடுத்துக் காட்டி உரைநிகழ்த்தினார்கள். இன்றைய இளைஞர்கள் தமிழர்களது வரலாறுகளை அறிந்து கொள்ளவும், தமிழர்களின் தெளிவான, தீர்வுக்கான அடித்தளங்களை வெளிநாடுகளும் அறிந்திருக்க வேண்டுமென்ற காரணத்தாலும் நடக்க இருக்கும் தேர்தலைப் பரப்புரை செய்கின்ற மக்கள் பணி இப்பொழுது நடைபெறுகிறது என்றும், அனைவரும் ஒற்றுமையாகச் செயலாற்ற வேண்டும் என்றும் பலர் கேட்டுகொண்டதாக அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பல எதிர்க்குரல்கள் இதற்கு எதிராக இல்லாமலில்லை.

30 வருட காலத்திற்கு மேலாக தமிழ் தேசியத்தை வலிந்து தலைமை தாங்கிய தலைவர் பிரபாகரன் எந்தவொரு காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ அல்லது அத்தீர்மானத்திற்கு அத்திவாரமாக இருந்த தமிழ் அரசியல் தலைவர்களைப் பற்றியோ பெரிதாக ஏதும் கூறிவிடவில்லை. அங்கீகரிக்கக் கூட இல்லை. அதற்கு மாறாக………. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களை வரிசையாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுடத் தவறவில்லை. ஏன் அவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தால் தொண்டமான் என்ன தந்தை செல்வா உட்பட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளங்களை கூட சுட்டுத்தள்ள ஒரு கணம் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அடிப்படை அரசியலுக்கும் குறைந்த பட்ச ஜனநாயகத்திற்கும் கூட எந்தவித இடமும் கொடுக்காத விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவுகளும் இன்று காலாவதியாகிப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிவைத்து தாண்டவம் ஆடுவது கண்கெட்ட பின் நடத்துகின்ற சூரியநமஸ்காரத்திற்கு ஒப்பானது. தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆக மொத்தமாக பார்க்கும் போது 98.95% நோர்வே மக்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றனர் என்று வெளியாகிய செய்தி சதாம் உசைன் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஈராக்கில் இடம்பெற்ற தேர்தலில் சதாம் உசைன் ஈட்டிய மாபெரும் வெற்றிக்கு ஒப்பானது. 16 ஒக்ரோபர் 2002 ல் ஈராக்கில் இடம்பெற்ற வாக்களிப்பில் சதாம் உசைன் 99.96% வாக்குகளைப் பெற்று மேலும் 7 ஆண்டுகள் ஈராக்கை ஆள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். இன்று மே மாதம் 10ம் திகதி 2009ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு 98.95% ஆதரவு கிடைத்துள்ளது.


http:ADDUKODDAI RESOLUTION சொல்கிறது இப்படி,


THE RESOLUTION Unanimously adopted at the First National Convention of the TAMIL UNITED LIBERATION FRONT held at Vaddukoddai on May 14, 1976 Chairman S.J.V. Chelvanayakam Q.C., M.P. (K.K.S) Whereas, throughout the centuries from the dawn of history, the Sinhalese and Tamil nations have divided between themselves the possession of Ceylon, the Sinhalese inhabiting the interior of the country in its Southern and Western parts from the river Walawe to that of Chilaw and the Tamils possessing the Northern and Eastern districts; And, Whereas, the Tamil Kingdom was overthrown in war and conquered by the Portuguese in 1619, and from them by the Dutch and the British in turn, independent of the Sinhalese Kingdoms; And, Whereas, the British Colonists, who ruled the territories of the Sinhalese and Tamil Kingdoms separately, joined under compulsion the territories of the Sinhalese and the Tamil Kingdoms for purposes of administrative convenience on the recommendation of the Colebrooke Commission in 1833; And, Whereas, the Tamil Leaders were in the forefront of the Freedom movement to rid Ceylon of colonial bondage which ultimately led to the grant of independence to Ceylon in 1948; And, Whereas, the foregoing facts of history were completely overlooked, and power over the entire country was transferred to the Sinhalese nation on the basis of a numerical majority, thereby reducing the Tamil nation to the position of subject people; And, Whereas, successive Sinhalese governments since independence have always encouraged and fostered the aggressive nationalism of the Sinhalese people and have used their political power to the detriment of the Tamils by- (a) Depriving one half of the Tamil people of their citizenship and franchise rights thereby reducing Tamil representation in Parliament, (b) Making serious inroads into the territories of the former Tamil Kingdom by a system of planned and state-aided Sinhalese colonization and large scale regularization of recently encouraged Sinhalese encroachments, calculated to make the Tamils a minority in their own homeland, (c) Making Sinhala the only official language throughout Ceylon thereby placing the stamp of inferiority on the Tamils and the Tamil Language, (d) Giving the foremost place to Buddhism under the Republican constitution thereby reducing the Hindus, Christians, and Muslims to second class status in this Country, (e) Denying to the Tamils equality of opportunity in the spheres of employment, education, land alienation and economic life in general and starving Tamil areas of large scale industries and development schemes thereby seriously endangering their very existence in Ceylon, (f) Systematically cutting them off from the main-stream of Tamil cultures in South India while denying them opportunities of developing their language and culture in Ceylon, thereby working inexorably towards the cultural genocide of the Tamils, (g) Permitting and unleashing communal violence and intimidation against the Tamil speaking people as happened in Amparai and Colombo in 1956; all over the country in 1958; army reign of terror in the Northern and Eastern Provinces in 1961; police violence at the International Tamil Research Conference in 1974 resulting in the death of nine persons in Jaffna; police and communal violence against Tamil speaking Muslims at Puttalam and various other parts of Ceylon in 1976 - all these calculated to instill terror in the minds of the Tamil speaking people, thereby breaking their spirit and the will to resist injustices heaped on them, (h) By terrorizing, torturing, and imprisoning Tamil youths without trial for long periods on the flimsiest grounds, (i) Capping it all by imposing on the Tamil Nation a constitution drafted, under conditions of emergency without opportunities for free discussion, by a Constituent Assembly elected on the basis of the Soulbury Constitution distorted by the Citizenship laws resulting in weightage in representation to the Sinhalese majority, thereby depriving the Tamils of even the remnants of safeguards they had under the earlier constitution, And, Whereas, all attempts by the various Tamil political parties to win their rights, by co-operating with the governments, by parliamentary and extra-parliamentary agitations, by entering into pacts and understandings with successive Prime Ministers, in order to achieve the bare minimum of political rights consistent with the self-respect of the Tamil people have proved to be futile; And, Whereas, the efforts of the All Ceylon Tamil Congress to ensure non-domination of the minorities by the majority by the adoption of a scheme of balanced representation in a Unitary Constitution have failed and even the meagre safeguards provided in article 29 of the Soulbury Constitution against discriminatory legislation have been removed by the Republican Constitution; And, Whereas, the proposals submitted to the Constituent Assembly by the Ilankai Thamil Arasu Kadchi for maintaining the unity of the country while preserving the integrity of the Tamil people by the establishment of an autonomous Tamil State within the framework of a Federal Republic of Ceylon were summarily and totally rejected without even the courtesy of a consideration of its merits; And, Whereas, the amendments to the basic resolutions, intended to ensure the minimum of safeguards to the Tamil people moved on the basis of the nine point demands formulated at the conference of all Tamil Political parties at Valvettithurai on 7th February 1971 and by individual parties and Tamil members of Parliament including those now in the government party, were rejected in toto by the government and Constituent Assembly; And, Whereas, even amendments to the draft proposals relating to language, religion, and fundamental-rights including one calculated to ensure that at least the provisions of the Tamil Lanaguage (Special Provisions) Regulations of 1956 be included in the Constitution, were defeated, resulting in the boycott of the Constituent Assembly by a large majority of the Tamil members of Parliament; And, Whereas, the Tamil United Liberation Front, after rejecting the Republican Constitution adopted on the 22nd of May, 1972, presented a six point demand to the Prime Minister and the Government on 25th June, 1972, and gave three months time within which the Government was called upon to take meaningful steps to amend the Constitution so as to meet the aspirations of the Tamil Nation on the basis of the six points, and informed the Government that if it failed to do so the Tamil United Liberation Front would launch a non-violent direct action against the Government in order to win the freedom and the rights of the Tamil Nation on the basis of the right of self-determination; And, Whereas, this last attempt by the Tamil United Liberation Front to win Constitutional recognition of the rights of the Tamil Nation without jeopardizing the unity of the country was callously ignored by the Prime Minister and the Government; And, Whereas, the opportunity provided by the Tamil United Liberation leader to vindicate the Government’s contention that their constitution had the backing of the Tamil people, by resigning from his membership of the National State Assembly and creating a by-election was deliberately put off for over two years in utter disregard of the democratic right of the Tamil voters of Kankesanthurai, and, Whereas, in the by-election held on the 6th February 1975, the voters of Kankesanthurai by a preponderant majority not only rejected the Republican Constitution imposed on them by the Sinhalese Government, but also gave a mandate to Mr. S.J.V. Chelvanayakam, Q.C. and through him to the Tamil United Liberation Front for the restoration and reconstitution of the Free Sovereign, Secular, Socialist State of TAMIL EELAM. The first National Convention of the Tamil United Liberation Front meeting at Pannakam (Vaddukoddai Constituency) on the 14th day of May, 1976, hereby declares that the Tamils of Ceylon by virtue of their great language, their religions, their separate culture and heritage, their history of independent existence as a separate state over a distinct territory for several centuries till they were conquered by the armed might of the European invaders and above all by their will to exist as a separate entity ruling themselves in their own territory, are a nation distinct and apart from Sinhalese and this Convention announces to the world that the Republican Constitution of 1972 has made the Tamils a slave nation ruled by the new colonial masters, the Sinhalese ,who are using the power they have wrongly usurped to deprive the Tamil Nation of its territory, language citizenship, economic life, opportunities of employment and education, thereby destroying all the attributes of nationhood of the Tamil people. And, while taking note of the reservations in relation to its commitment to the setting up of a separated state of TAMIL EELAM expressed by the Ceylon Workers Congress as a Trade Union of the Plantation Workers, the majority of whom live and work outside the Northern and Eastern areas, This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of TAMIL EELAM, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country. This Convention further declares - 1. that the State of TAMIL EELAM shall consist of the people of the Northern and Eastern provinces and shall also ensure full and equal rights of citizenship of the State of TAMIL EELAM to all Tamil speaking people living in any part of Ceylon and to Tamils of EELAM origin living in any part of the world who may opt for citizenship of TAMIL EELAM. 2. that the constitution of TAMIL EELAM shall be based on the principle of democratic decentralization so as to ensure the non-domination of any religious or territorial community of TAMIL EELAM by any other section. 3. that in the state of Tamil Eelam caste shall be abolished and the observance of the pernicious practice of untouchability or inequality of any type based on birth shall be totally eradicated and its observance in any form punished by law. 4. that TAMIL EELAM shall be a secular state giving equal protection and assistance to all religions to which the people of the state may belong. 5. that Tamil shall be the language of the State, but the rights of Sinhalese speaking minorities in Tamil Eelam to education and transaction of business in their language shall be protected on a reciprocal basis with the Tamil speaking minorities in the Sinhala State. 6. that Tamil Eelam shall be a Socialist State wherein the exploitation of man by man shall be forbidden, the dignity of labor shall be recognized, the means of production and distribution shall be subject to public ownership and control while permitting private enterprise in these branches within limit prescribed by law, economic development shall be on the basis of socialist planning and there shall be a ceiling on the total wealth that any individual of family may acquire. This Convention directs the Action Committee of the TAMIL UNITED LIBERATION FRONT to formulate a plan of action and launch without undue delay the struggle for winning the sovereignty and freedom of the Tamil Nation; And this Convention calls upon the Tamil Nation in general and the Tamil youth in particular to come forward to throw themselves fully into the sacred fight for freedom and to flinch not till the goal of a sovereign state of TAMIL EELAM is reached.

tamilcircle.net ல் சேர்க்கப்பட்டிருக்கும் கருத்து இது,

தமிழ்த் தேசியவாதிகள் வட்டுக்கோட்டையில் இருந்து புலம்பெயர்வரை சொல்ல முற்படுவதும், தனிஈழம் கிடைத்து இனத்தை இனம் ஆள்வதால் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தீரும் என்பதே. உலகில் பலநாடுகளில் இனத்தை இனம் ஆள்கின்றனர். இதனால் அம்மக்களின் பிரச்சினைகள் தீர்ந்ததாக வரலாறே இல்லை. எமது நாட்டிலும் இவர்கள் சொல்வது போல் சிங்கள இனத்தை சிங்களவர்கள்தான் ஆட்சி செய்கின்றனர். இதனால் சிங்கள மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதாக சொல்லமுடியுமா?
சிங்கள மக்களே ஐனநாயகம் உட்பட்ட அனைத்துச் சுதந்திரங்களுக்கும் தாங்களே போராட வேண்டியுள்ளது. தாம் நினைக்கும் ஓர் சுதந்திரமான ஐனநாயகப் பண்புடைய நிர்வாக அரசியலை, அரசியல் கட்சிகளை குறைந்தது உள்ளுராட்சி சபைகளிலேயே நிலைநிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி ஆட்சி முறையையே மாற்றத் திராணியற்றவர்களாகவே உள்ளனர். காரணம் மகிந்தா இன்னொரு புலியாக –பிரபாகரனாக செயற்படுகின்றார். புலிகளின் கடந்த முப்பது வருட செயற்பாட்டால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, நாடு கடந்து "வட்டுக்கோட்டைக்கு வாக்களிப்பதால்" பெறமுடியும் என்று சொல்ல முன்வருவது நகைப்பிற்குரிய புலுடா அரசியலே. இரயாகரன் என்பவரின் கருத்து இது. உளுத்துப் போன அந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை இன்று தூக்கிகொண்டு, புலத்து புலி மாபியாக்கள் தமிழன் சாகின்றான் என்று ஓப்பாரி வைக்கின்றனர். தமிழனையே சாகடித்தவன் மீண்டும் ஒப்பாரி வைப்பது, தன்னுடன் சேர்ந்து ஒப்பாரி வைக்க வரும்படி தமிழினத்தைக் கோருவதும் இன்று அரங்கேறுகின்றது. தமிழினத்தை அழித்தும், அழிக்கவும் உதவிய புலத்துப் புலித் துரோகிகள், தங்களை மூடிமறைத்துக் கொண்டு தமக்கு வே~ம் கட்டி மீண்டும் பவனி வர முனைகின்றனர். இவர்கள் தான் தமிழினத்தை உள்ளிருந்து அழித்த, அதன் பெயரில் திண்டு கொழுக்கும், தமிழனுக்குள் இருக்கும் முதல்தரமான துரோகிகள் ஆவர்.

இது அவருக்குப் பதில் கொடுப்பவரின் கருத்து


இரயாகரன்
உமக்கு இந்த வர்கம் ஆணாதிக்கம் சோசலிசம் இதுதவிர ஏதாவது தெரியுமா? சரி உமது கட்டுரையில் ஆணாதிகம் யாழ்ப்பாண மேல்வர்கம் இவையெல்லாம் சேர்ந்துதான் வட்டுக்கோட்டை தீர்மணத்தை கொண்டுவந்தது என்று எழுதியிருக்கிறீர். 1977 தேர்தலில் தமிழீழம் வாங்கித்தருவோம் என்றுதான் அமிரும் மற்றவர்களும் கூறி வாக்கு கேட்டனர். அந்த தேர்தலில் 97% வடகிழக்கு மக்கள் வாக்களித்தனர். அதில் 92% தவிpகூ விற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது வரலாறு அப்ப உம்மட எழுத்துப்படி பார்த்தால் உந்த 92 வீதமும் ஆம்பிள்ளைகளாகவும் பணபலம் உடையவராகவும் அதுவும் யாழ்ப்பாணத்தவராக மட்டுமல்லோ இருக்க வேண்டும். கிழக்கு மக்கள் பெண்கள் மற்றும் வசதி குறைந்தோர் என்ன வெறும் 8% மட்டுமோ? சும்மா வர்க்கம் )ர்ச்சுவா மண்ணாங்கட்டி என்று சனங்களுக்கு )ச்சுத்தாமல் எதாவது சொல்லவந்தால் நேரா சொல்லப்பாரும். ஆதை விட்டுட்டு இடது வலது என்று அலுகோசு கதை கதைத்துக்கொண்டிருங கோ. உந்த கொம்மியூனிசம் எல்லாம் புத்தகத்தில்தான். உதாரணத்திற்கு சீனாகாரன் அமரிக்கனுடன் சேர்ந்து தான் இலங்கையில் சனத்தைகொலை செய்ய உதவினார்கள். அப்ப கொம்மியூனிசமும் முதலாளித்துவமும் என்ன நித்திரையே கொண்டது. எதையும் கெம்மியூனிசம் கொண்டுபார்ப்பது மஞ்சள் கண்ணாடி போட்டுட்டு உலகம் மஞசள் என்ற கதைதான் விரைவில்.... சத்தியம், November 17, 2009


திரு.இரயாகரன்...
நீங்கள் எவ்வளவு விரைவில் மனநல மருத்துவர் ஒருவரைப் பார்க்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து இன்று மாதம் ஆறாகிறது. உங்களைப் போன்ற மாற்றுக்கருத்து சித்தாந்திகள் என்ன செய்தீர்கள்? இன்றைக்கு ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கு , முள்வேலி முகாம் தமிழர்களுக்கு என்ன செய்து கிழித்தீர்கள்??? உங்களைப் போல் வெறும் கொள்கை முழக்கம் போட்டுக்கொண்டு இணையத்தில் எழுதிக் கிழிப்பவர்களால் ஒரு மசுரும் புடுங்க முடியாது. அதனால் சும்மா கூப்பாடு போடாமல் தமிழ் மக்களை பிரிப்பதை நிறுத்துங்கள்... அல்லது ஒதுங்கியிருங்கள்...இல்லாவிடில் சிறிலங்கா அரசாங்கம் போடும் ரொட்டித்துண்டுகளைக கவ்விக் கொண்டு அவர்களின் பின்னால் செல்லுங்கள்... இன்னமும் கூட அரிப்பிருந்தால் , எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மனநல மருத்துவர் ஒருவரைப் பாருங்கள்... புலியோ போபியா முற்றினால் ஆபத்து.


n educated Tamils write like this!
பதிந்தவர் suthan, November 16, 2009 It so sad that due to Sri Lankan nazism those Tamils who quit the country in 80s and 90s never had a chance to educated themselves. Due to this historical disaster whole generation of Tamils who came as refugees to these countries could not learn language , and could not get University or High school education. Those type Tamil are writting some articles against Vattukottai referendum and Tamil Eelam. Tamil Eelam is in the blood of every true Tamil, and few selfish Tamils cannot stop us! We all know Father Selvanayagam and Thesia Thaliavar are our great leaders! Dogs can bark ...still our Caravan goes! I am so proud that educated Tamils and intelectual/professional Tamils are united and moving forward...few of these who can just write all the rubbish in Tamil and go to bed! We will unite and win our Eleam...any donkey cannot stop this! #


இதே நீங்கள், //தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.// என்றும் சொல்லுகிறீர்கள். என்ன தீர்வு சரி என்றும் மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள். வட்டுக்கோட்டை முடிவையும் மக்கள் அத்தீர்ப்புக்கு வழங்கிய அங்கீகாரத்தையும் தூக்கி எறிவது எவ்வகையில் சரி? ஒரு தீவு ஒரு தேசம் என்பது இன்னமும் சாத்தியம் தானா? இறக்குவானை இலன்கை எங்கும் வியாபிக்க மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? சரி - புலிகள் அற்ற ஒரு தனிநாடு என்ற கோரிக்கைக்குநியாயம் இருக்கிறதா இல்லையா? இந்தியாவோ அல்லது ஐநாவோ இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்து தருமாறு கேட்பது ஏற்புடையதா? இதே கேள்விக்கு மற்றவகளும் பதில் தரலாம். #

சிலகருத்துக்கள் புலிகளின் பின்னடைதலுக்கு முன்னவை என்ற போதிலும் அவைகளும் வட்டுகோட்டை சம்பந்தப்பட்டதால் இதில் தவிர்க்க முடியாதுள்ளது.
suban on May 13, 2009 12:03 pm


1977ம் ஆண்டு மக்கள் இட்ட ஆணை 30 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்படுகிறது.
இடைக்காலத்தில் புலிகள் நடத்திய ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் எல்லாம் 1977ம் ஆண்டு மக்கள் இட்ட ஆணையை முன்வைத்தா நடத்தினார்கள். ஐந்து வருடத்துக்குள்ளேயே ஏன் ஒருவருடத்துள் தோ;தல் நடந்தாலே மக்கள் அதே கருத்துடன் இருப்பதில்லை. 30வருடங்களிற்குப் பிறகும் மக்கள் அதேகருத்துடன் இருக்கிறார்கள் என்று வாதிடுவது எந்தவகையிலும் பொருத்தமானதல்ல. இன்று புலிகளின் இந்தவாக்கெடுப்பு விளையாட்டுகளெல்லாம் இயலாமையில்எழும் சிற்றின்பலீலைகள்தான். அதிலும் இந்த புலம்பெயர்ந்த தமிழர் உடம்புநோகாம நல்லாத்தான் போராடுகிறார்கள். இந்த வாக்கெடுப்புகள் பாருங்கள் எல்லாத்தேசத்திற்கும் பரவும். பிறகு நிழல் அரசாங்கம் மந்திரிசபை எல்லாம் அமைத்து மகிழ்வார்கள். பாருங்கள் ஜெயலலிதா எவ்வளவு சிம்பிளா உலகத் தமிழினத் தலைவியாகிவிட்டார். இப்படி இலகுவாக எங்கட தமிழ்சமூத்திலதான் ஆகலாம்.

# Rohan on May 13, 2009 12:39 pm //பாருங்கள் ஜெயலலிதா எவ்வளவு சிம்பிளா உலகத் தமிழினத் தலைவியாகிவிட்டார். இப்படி இலகுவாக எங்கட தமிழ்சமூத்திலதான் ஆகலாம்.// நம்பிக் கெட்டும் ஞானம் வராத இனம் நம்மினம். என்ன செய்வது? ஆனால், சமுத்திரத்தில் அமிழ்பவன் ஒரு சிறு மரக் கட்டையைக் கண்டாலும் அதைப் பற்றிக கொண்டு தப்பிவிடலாம் என்று நினைப்பது போல், தமிழனுக்குக் கிடைத்திருப்பது ஜெயலலிதா என்ற மரக்கட்டை.

# பார்த்திபன் on May 13, 2009 12:53 pm

றோகன் உங்கள் உதாரணம் கூட பொருந்துவதாக அமையவில்லையே. மரக்கட்டையைப் பிடித்திருந்தால் அதை வைத்து நீந்தியாவது கரை சேரலாம். ஆனால் எம்மவர் சிலர் கடலில் மிதந்து வருவது பஞ்சு மூட்டை என நம்பி பிடித்திருப்பது கரடியை.


# பார்த்திபன் on May 13, 2009 1:35 pm
. மகிந்த அரசு புலிகளின் மீதான யுத்தத்தை ஆரம்பித்து மடுவிற்கு முன்னேறிய போது நடேசன் சொன்னார் அரசு உடனடியாக யுத்த நிறுத்தம் செய்ய வேண்டும் தாம் (புலிகள்) யுத்தநிறுத்த உடன்படிக்கையை வரிக்கு வரி நடைமுறைப்படுத்துகின்றோம் என்று. அதன் பின் இராணுவம் படிப்படியாக முன்னேறி கிளிநொச்சி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்று தொடர்ந்து வீழ்ந்ததும் நடேசன் சொன்னார் தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தம் செய்வதாகவும் திம்பு பேச்சுவார்த்தையில் எட்டிய முடிவுகளை தாம் நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும். தற்போது இறுதியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் தூசு தட்டி எடுத்து புலன் பெயர்ந்த பெடியளை உசுப்பேத்தி ஏதாவது செய்யலாமா என்று பார்க்கின்றார். புலிகளின் இப்படியான தந்துரோபாய அறிக்கைகளை சரியாக உற்று நோக்கினால் யாவரும் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இங்கே புலிகளால் வெளியிடப்பட்ட செய்திகள் யாவும் எந்தத் தீர்மானத்திலும் தெளிவான பிடிப்பில்லாமல் ஏதாவது ஒன்று சரிவராவிட்டால் மற்றைய தீர்மானம் எனத் தொடர்வதும் இதில் எந்தவொரு தீர்மானத்தையும் அரசு ஏற்று உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு தங்கள் தலைகளின் உயிர்களை காப்பாற்ற மட்டுமே முயற்சிக்கின்றார்கள் என்பதும் தெளிவு. புலிகள் முன்பு எந்தக் காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. அவர்களின் தீர்மானம் என்றும் ஆயுதம் சார்ந்ததாகவே இருந்தது. அதனாலேயே அன்று பல அரசியல்வாதிகளையும், புத்திசாலிகளையும் போட்டுத் தள்ளி தமிழ் மக்களை ஆட்டுமந்தைக் கூட்டமாக்கி தாம் சொல்லுவதற்கு மட்டும் துப்பாக்கி முனையில் தலையாட்ட வைத்தார்கள். பின்பு எதற்காக தற்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை கையிலெடுத்தார்கள் புலி பசித்தால் புல்லையும் தின்னும் என்று காட்டவா?? திம்புப் பேச்சுவார்த்தையில் சில இயங்கங்கள் கொள்கையடிப்படையில் ஒன்றாகச் சேர்ந்து இயங்கவது என முடிவெடுத்து அனைவரும் கையெழுத்து போட்டனர். கையெழுத்துப் போட்ட மை காய முன்னமே அதைக் கிழித்தெறிந்தவர்கள் புலிகள். பின்பு எப்படி தி்ம்பு பேச்சுவார்த்தையில் எட்டிய முடிவுகளை நடைமுறைப்படுத்தவார்கள்?? மகிந்த அரசிற்கு அடிக்கடி தாங்கள் சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து விட்டு போரை ஆரம்பித்து விடுவோமென பலமுறை மிரட்டல்கள் விட்டுக் கொண்டிருந்தனர் புலிகள். இதன் மூலம் மகிந்த அரசை பயமுறித்தியே தமது வழிக்குக் கொண்டுவரலாமெனவும் சண்டை ஆரம்பித்தாலும் அதை தொடர்ந்து நடாத்தும் ஆற்றலோ ஆதரவோ மகிந்தவிற்கு இல்லையென்றும் புலிகள் கனவு கண்டு கொண்டிருந்தனர். அதன் உச்சக் கட்டமாகவே மாவிலாறை இடைமறித்தனர். அதன் பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போதைய நிலைமைகள் புலிகளுக்கு பாதகமாக இருப்பதால் இப்படி எதையாவது சொல்லி தம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாதா என்று அங்கலாய்க்கின்றனர். நோர்வேயில் வாக்கெடுப்பில் பங்குபற்றியவர்களில் 98.5 வீதமானவர்களே வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தள்ளனர். ஆனால் ஊதறுப் பத்திரிகையும் ஏனைய சில ஊடகங்களும் ஏதோ நோர்வேயிலுள்ள தமிழ் மக்களில் 98.5 வீதமானோர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக ரீல் விட்டுள்ளனர். ஆனால் இத்தீர்மான வாக்களிப்பால் என்ன பயன் ஏற்படப் போகின்றதென்பதை எவரும் விளக்கவுமில்லை. இங்கே GTV மற்றும் தீபம், IBC போன்ற ஊடகங்களின் புரளி பற்றியும் சிலர் குறிப்பிட்டுள்ளார்கள். தற்போது தீபம் எப்படி தமிழர்களை முட்டாள்களாக்குகின்றதென்பதையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். காரணம் தீபம் 3 நாட்களுக்கு முன்பு ஒளிப்பதிவு செய்த ஒளிபரப்புகளைக் கூட நேரலை (Live)என்று போட்டுக் காட்டி தமிழ்மககள் அனைவரையும் முட்டாள்களாக்குவதில் முன்னிலை வகிக்கின்றது. றோகன் மேலே பதியப்பட்ட எனது கருத்தை உங்களுக்கான பதில்க் கருத்தாகவும் இங்கு தந்துள்ளேன்.

# ross on May 13, 2009 1:40 pm
//ஒரு தீவு ஒரு தேசம் என்பது இன்னமும் சாத்தியம் தானா?

//Rohan
NO.Tamil Ealam is the only soluation. # thurai on May 13, 2009 2:38 pm

வன்னியின் போர் அவலங்கழும், அகதிகளாகி இராணுவத்திடம் ஒருநேர உணவிற்கு கையேந்தும் மக்களின் நிலமையையும் கருத்திற் கொள்ளாத தமிழரே வட்டுக்கோட்டை தீர்மானம் பற்ரிப் பேசுகின்றனர். மக்களின் நலனை மதிக்காத, பதவிமோகம் கொண்டவர்களின் செயற்பாடுகளே இவைளெல்லாம்.
83 கலவரத்தை காட்டி தொடங்கிய போராட்டம், இன்று அடிதவர்களிடமே தமிழரை கையேந்த வைத்து விட்டது. இனியாவது தமிழரின் உருமை பற்ரி பேசுவோர் முதலில் புலத்தை விட்டு விட்டு வன்னிக்குப் போங்கள். புலத்தில் வாழும் தமிழராவ்து நிம்மதியாக இருக்கட்டும் துரை

# Kullan on May 13, 2009 3:21 pm
நான் இதை மீண்டும் வலியுறுத்துகிறேன் 98.95வீதம் என்பது முழுப்பிழையானது. சிலவருடங்களுக்கு முன் நகரசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் இடையே தேர்தல் பிரசாரம் செய்த பிரமுகர்கள் கூறினார்கள் நோர்வே தலைநகரில் மட்டுமே 10 000 விடக்கூடிய வாக்குகள் இருக்கிறன்றன என்று. இப்படி நாடுமுழுவதுமாக சுமார் 8 000 ஆனது. இம்முறை வாக்களிப்பதற்கு நோர்வேயித் தமிழர்கள் மட்டுமல்ல இடைக்கால விசா இருப்பவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள். எப்படி வாக்குரையுள்ளவர்கள் தொகை குறைந்தது. இங்கேயும் புலிகளின் பிஸ்டல் குழு திரிகிறதா? இது மக்களைக் கேணையர்களாக்கும் வேலை. வரலாற்றுத் தவற்றைத் திருத்த எத்தனிப்பது காலம் கடந்த ஞானம் என்கிறார். நீங்கள் புலிகளைப் புரிந்து கொண்டவிதம் பிழையானது.¨தம்வரலாற்றுத் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தான் உண்மை. இன்னும் வெளிநாட்டுப் பணங்களிலும் அங்குள்ள குழந்தை குட்டிகளின் குருதியிலும் நீச்சல்தடாகம் கட்டி விளையாட விரும்புகிறார்கள். ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் உத்துறுப் என்ற ஊடகத்தைப்பற்றி எழுதிய அத்தனையும் உண்மை. இந்திய கொழும்புப் பத்திரிகைகளுக்குத் தெரிந்த விடயம் நோர்வே வாழ் தமிழ்சமூகத்துக்கு தெரியவில்லை என்றால் இவர்களின் வாரிசுகள் வன்னியில் அடிவாகிச்சாகாமல் என்ன வேறு என்ன செய்யும். ஒரு செம்மறியாடு முன்னால் கத்திக் கொண்டு போனால் மிச்சம் மீதியான செம்மறிகளும் பபபப என்று கத்திக் கொண்டு போகுமாம். இதுதானே உலகநாட்டுத் தெருக்களில் நடக்கிறது. தயவுசெய்து எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள் புலிகள் இவ்வளவு காலமும் நடத்தியது விடுதலைப் போராட்டமல்ல. வெளிநாட்டுத் தமிழர்களைத் திருப்திப்படுத்தி பணம்பற்றித்தலே நடந்தது. அதனால்தான் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற அறிய முயற்சிக்கிறார்கள். இதை நடத்திய உத்துறுப் என்ற சிறு ஊடகம் இந்தத் தேர்தலை ஒரு புரயெக்ட் (செயல்வடிவம் > செயல்திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டது என்று காட்டி அரசிடம் உதவிபணம் பெறுவார்கள்.; இங்கும் வியாபாரம்தான். ஊரையடித்து உலையிலையிலை போடவேண்டும் என்று நிற்கிறீர்கள் எடுபட்டவர்கள் குடுத்துத் தொலையுங்கோ.

# indiani on May 13, 2009 5:22 pm
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் நாயகனே அமிர்தலிங்கம் இந்த அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்றதிற்கு இன்று என்ன? பதில் புலிகளம் இன்று தீர்மானத்தை கேவலப்படுத்தும் கி பி அரவிந்தன் கோஸ்டி பதில் தரமா? இந்த அமிரின் கொலையை கண்டிக்குமா? இந்த வாக்கெடுப்புக்கு முன்பு அமிரின் கொலைளை கண்டித்து இந்த தீர்மானத்தின் மீது ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதை யபருக்கும் விளக்கமளித்தாக எமக்கு தெரியவில்லை எல்லாம் இதுவும் ஏக போகபிரதிநிதித்துவத்தின் விளைவோ எடுத்தது எல்லாம் செய்யலாம் நீங்கள் போடு எண்டால் போட வேண்டும் தெருவுக்கு வா எண்டால் வரவேண்டும் இல்லாவிட்டால் அழுது எண்டாலும் கூப்பிடுவியள். கி பி அரவிந்தன் உமது மாக்ஸீய அரசியல் புளித்து விட்டது புலிகளின் திருகு தாளங்களை இப்போ நீங்கள் பிடித்துக்கொண்டு புலிகள் தான் கட்டாயப்படத்தி செய்விக்கிறாங்கள் எண்டு கதையும் வேற அளப்புக்கு குறைவில்லை. வாக்களித்தவர்களுக்கு மண்டையில் என்ன இருக்கு தாங்கள் ஜரோப்பிய பிரஜைகள் எப்படி ஈழப்பிரச்சினைக்கு வாக்களிக்க முடியும். முதலில் வெளியேறி கஸ்டப்படும் மக்களுக்கு வணங்கா மண்ணுக்கு சேர்த்த உணவுப் பொருட்களை அனுப்பச் சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்தினால் பிரயோசனமாக இருக்கும். வணங்காமண் பொருட்கள் எட்மன்டனில் தனியார் களஞசியத்தில் கிடந்து பழுதடைகிறதாம் புலிகள் அவரை வித்துவிட்டு காசுதரும்படி கேட்டுள்ளனர் ஆனால் அந்த கடை முதலாளி பின்னாளில் தனக்கு பிரச்சினை வரப்போகுது எண்டு பயப்பிடுகிறாராம்.

# மாயா on May 13, 2009 7:11 pm

மக்களுக்காகத்தான் போராட்டம். போராட்டத்துக்காக மக்கள் இல்லை. ஆனால் இப்போது நடப்பது போராட்டத்துக்கான நியாயத்தை நிலை நிறுத்துவதற்கு மக்கள் கேடயங்களாக போர்ப் பிரதேசத்திலும் , ஊதுகுழல்களாக புலத்திலும் பலியாக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் தமிழருக்கான பிரச்சனையை உலகத்தின் கண்களுக்கு எடுத்துச் சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இதனால் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை உலகம் அறிந்து கொண்ட நிலையை விட அதிகம். புலிகள் கவர்ச்சியான விளம்பரங்கள் போல் வீர காவியப் பேச்சுகளை நடத்தினார்கள். இப்போது அதை நிறுத்தி விட்டு , இறுதி நேரத்தில் வீரிட்டு கத்துகிறார்கள். ஒரு அபலையின் குரல் கேட்டு எந்தவொரு நாயகனாவது கை கொடுப்பான்? என்பதே போன்ற புலிகளது ஆதங்கம். எதிர்பார்ப்பு. இவை அனைத்துக்கும் மேலாக உறவுகளை இழந்த , உறவுகள் குறித்த தகவல் தெரியாத புலத்து மக்களின் சோகம், அவர்களோடு இணைந்து வாழும் எமக்கும் சோகத்தைத்தான் தருகிறது. இவற்றை பார்த்து சிரிப்பவனாக யாராவது இருந்தால் அவன் மன நோயாளியே? இதைவிட சோகம் போர் மூண்டுள்ள பகுதிகளிலும் , இடைத் தங்கல் முகாம்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ளவர்களை விட அந்த மக்களின் சோகமும் , அந்த மக்களின் எண்ணங்களுமே முக்கியமானது. இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஒரு படை வீரனை , இராணுவம் மீண்டும் பிடித்துச் செல்ல முற்படும் போது , மகனை காப்பாற்ற அந்த படை வீரனின் தாய் கதறித் தடுக்க முனைகிறாள். அரசுக்கு சாபமிடுகிறாள்.அது நிறைவேறாது போய் பிடித்துச் செல்ப்பட்டவன் போரில் இறந்த பின், அதே தாய் தன் மகன் மாவீரன் என்று சொல்லிக் கொள்கிறாள். முன்னது நிஜம். பின்னது தன்னையே தான் ஏமாற்றிக் கொள்ளும் மனோபாவம். இதே சோகம்தான் பலியாகும் அத்தனை தமிழ் போராளிகளுக்கும். அத்தனை சிங்கள படையிருக்கும். இதை நிறுத்தும் வல்லமை மக்களிடம் இல்லை. இப்போதும் தலைவர்களிடமே இருக்கிறது. இங்கே யார் யாரிடம் தோற்பதென்பது முக்கியமல்ல. யார் தன் மக்கள் குறித்து சிந்திக்கிறார்கள் என்பதே முக்கியம். ஏசு , தன்னை கொலை செய்யத் தேடி வந்தவர்களிடம் , தன் சீடர்களை காட்டி விட்டு தப்பி இருந்தால் ஏசுவை எவருமே ஏறிட்டும் பார்த்திருக்க மாட்டார்கள். புத்தன் தனக்காக அடுத்தவர்களை போதி மரங்களின் கீழ் தியானம் இருந்து இறக்குமாறு பணித்திருந்தால், புத்தனை இந்த உலகம் பின்பற்றியிருக்காது. இப்போது நடப்பது என்ன? அதை நாம் சொல்லி அடுத்தவர் தெரிய வேண்டியதில்லை. மக்களை மீட்கும் பணி என மகிந்த சொல்கிறார். மக்களுக்கான யுத்தம் என பிரபாகரன் சொல்கிறார். ஆனால் சாகும் மக்கள் எவருடையது. அந்த மக்களுக்கு வாழ்வு கொடுத்துவிட்டு தன்னை ஒப்படைப்பதே தலைவனுக்குரிய அல்லது தாய்க்குரிய தன்மையாகும். இங்கே நடப்பது நல்ல தங்காள் கதை. அனைவரையும் சாகடித்து விட்டு தானும் சாக வேண்டும் எனும் எண்ணம். மேலத் தேசங்களிலும் , ஐரோப்பாவிலும், பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கருத்துகளை திணிக்க முடியாது. பெற்றோர் விடயத்தில் பிள்ளைகள் அழுத்தங்கள் கொடுப்பதில்லை. அது என் பிரச்சனையில்லை. அது அவர் பிரச்சனை எனும் மனப்பாங்கு இருக்கிறது. அதுவே நடைமுறையாகவும் உள்ளது. உங்கள் வீட்டில் என்ன பிரச்சனை என்ன என்று யாரும் கேட்பதில்லை. உனக்கு என்ன பிரச்சனை என்றே கேட்பார்கள்? இப்படியான வாழ்கை முறையில் வாழும் அல்லது கற்ற ஐரோப்பாவுக்குள் உள்ள நோர்வே தமிழர்கள் எப்படி எங்கோ உள்ளவர்களது தலைவிதியை நிர்ணயிப்பது? உங்கள் தலைவிதியை அங்குள்ள மக்களால் நிர்ணயிக்க விட்டுத் தருவீர்களா? எனும் கேள்வி எழுந்தால், அது எப்படி முடியும். எம்மைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்ற கருத்தே நம்மிடமிருந்து வரும். எம்மை வழி நடந்த அவர்களுக்குத் தெரியாதது போல அவர்களை வழி நடத்த எமக்கும் தெரியாது என்பதே யதார்த்தம். இனி வரும் எந்தவொரு முடிவும் இலங்கை வாழ் மக்களால் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். அவை அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களால்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

# msri on May 13, 2009 11:06 pm

வேலையில்லாத உடையார் பழைய தோம்பை எடுத்து அடிக்கடி வாசிப்பாராம்! இந்நிலைதான் வட்டுக்கோட்டைத்தீர்மான வாக்கெடுப்பும்> விவாதங்களும்! தமிழ்மக்கள் விடுதலைக்கு ஆற்றையெண்டாலும் பரவாயில்லை ஒரு “தனிஈழம்” என்ற சொல் இருந்தால் போதும்! அது விடுதலை பெற்றது போன்றதொரு தற்திருப்தி! என்று தணியும் இந்த “தனிஈழ” மோகம்

Stalinistmao on May 14, 2009 2:47 pm

It seems LTTE did not approve this referendum. LTTE would have prefered if the referendum affirmed Tamils support to Tigers. Recently Nadesan confirmed that Tigers (Thesia Thalaivar Prabaharan) would consider a political solution based on Thimbu Principles which the LTTE bent on destroying some years ago. Nobody knows why the organisers rushed to conduct the referendum in a short space of time. What has been the UK Referendum result? # uma wrote on 11 November, 2009, 19:13 Hi Yes we have to support this Vaddukoddi Resolution and the mandate on itbrought out Tamil aspiratin for full independence even before armed struggle.It is now a historical duty of all tamils to strongly tell the whole world that what they desire is independent and sovereign Tamil Eelam. #

J.T.Arasu wrote on 14 November, 2009, 3:32


வட்டுக்கோட்டை தீர்மானத்தை அனைவரும் ஏகமனதாக ஆதரிக்க வேண்டுமானால் இவர்கள் இரண்டு விடயம்களை சீர்செய்ய வேண்டும் .இந்த தீர்மனம்களை முன்மொழிந்த ஆதரித்த இரண்டு தமிழர்கள் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் அரசியல் கொலைகள் தவறு என அறிவிக்கவேண்டும் [,யார பின்னணி என்பது அவசியம் இல்லை.]

இரண்டாவது கோரிக்கை தமிழ் ஈழ தேசியக்கொடி அவர்களால் அறிமுகம் செய்து வைத்த உதயசூரியன் கொடியும் அங்கீகரிக்கப்பட வேண்டும் .மேலும் தமிழர் தாயகம் தமிழீழம் என்பதற்கு பதிலாக ஈழம் என பெயர் சூட்டப்பட வேண்டும் .
வெறும் தீர்மானங்களை மட்டும் புது விளம்பரம் தருவதால் லாபம் ஏதும் இல்லை. போர்காலக் குற்றங்களுக்கு விடுதலைப்புலிகள் சர்வதேச நீதிமன்றுக்கு முன்னால் கொண்டு செல்லப்படுவது அவசியமென கனடியத்தமிழ்க் காங்கிரஸ் கருதினால் புலிகளின் போர்க்கால நடவடிக்கைகளை பகிரங்கமாக ஆதரித்து வந்த தமிழ்க்காங்கிரசும் சர்வதேச நீதிமன்றுக்கு முன் செல்ல வேண்டும்.

‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ தான் ஒரே வழி என கனடியப்புலிகள் நம்பினால், மலையகத்தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன தீர்வு என்பதை கூற முன்வர வேண்டும். கனடாவில் இருந்து கொண்டு தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளை மீறி அரசியல் கோசமாக்குவது எமது சமூகத்தை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்லும். கனடிய அரசியலுக்குள் நுழைவதற்கு தமிழ் அரசியல் கோசத்தை கொக்கரிப்பது என்பது ஒரு அரசியல் விபச்சாரமே அன்றி வேறில்லை.

3 comments:

suthan said...

ராமின் அறிக்கை புலம் பெயர் புலிகளைப் பொய்யராக்குகிறது.



http://i157.photobucket.com/albums/t74/sathiri/Mediarelease_bytheLTTENEW_22112009.jpg

srirangkan said...

புலிப் பினாமிகள் புலம் பெயர் தேசங்களில் செய்யும் "மாவீரர்"களியாட்டத்தை நிராகரிப்போம்,
புலிப்பினாமிகளை ஒட்ட வேரறுப்போம்,அவர்களிடமுள்ள எமது சொத்தைப் பறித்தெடுத்து வன்னியில் அவதியுறும் மக்களது விடிவுக்குப் பயன்படுத்துவோம்!
 
இதுவே,களத்தரில் பலியான ஆயிரமாயிரம் போராளிகளுக்குச் செய்யும் பெரும் வீர வணக்கமாகும்!!!
 
 
களமாடிச் செத்த அப்பாவிகளுக்கு நாம் தலை சாய்ப்போம்,
போலிப் புலிப் பினாமிகளை ஒட்ட வேரறுப்போம்-விடியலுக்காக இதைச் செய்வோம்!

shanmuga said...

'மாவீரர் தினக் கொண்டாட்டத்தில என்ர பிள்ள பேசப்போகிறான்,என்ர பிள்ளை ஆடப்போகுது'புருசன் பேசப்போகிறார் மனிசி பாடப்போகுது என்று சொல்லி தீபாவளி மாதிரி தங்களைத் தயார் செய்கிற புலன் பெயர்ந்தோரின் உலகில் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றித் தின்று முடிப்பரோ?

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter