Thursday, August 13, 2009

கே.பி. யின் நாடகம்.

கே.பி. யின் நாடகம்.
தன்னிச்சையாக முட்டுச் சந்தில் நின்று கொண்டு அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று கூப்பாடு போட்ட பலரின் உணர்வுக் குரல்வளைகளை நசித்துப் போட்டு விட்டு கே பி தானாகவே சரணடைந்தார் என்கின்ற செய்தி வந்திருக்கிறது.எது பொய்முகம்???
எது உண்மை முகம்???


கே.பி. எங்கள் ஹோட்டலில் வைத்து கைதானமைக்கான அறிகுறிகள் இல்லை - கே.பி தானாகச் சரணடைந்தாரா?

மக்களை தின்று ஏப்பம் விடுவதில் அக்கறை உள்ளவர்களாக மட்டுமே இருந்த மக்கள் நலன் விரும்பிகள்.
[ புதன்கிழமை, 12 ஓகஸ்ட் 2009, ]
விடுதலைப் புலிகளின் புதிய தலைவரான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், தமது ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலுள்ள ரியூண் ஹோட்டலின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இது குறித்து அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பத்மநாதன, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ரியூன் ஹேட்டலில் விடுதலைப்புலிகளின் உயர் அதிகாரி ஒருவரின் உறவினர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவரது கைத்தொலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்ததாக பரவலாக செய்திகள் வெளியாகின. அவர் தொலைபேசியல் பேசிக்கொண்டே வெளியே வந்த போது அங்கு காத்திருந்த புலனாய்வு அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ததாக விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக தாங்கள் நடத்திய சொந்த விசாரணையிலும் சரி தங்கள் சீ.சீ.ரீ.வி. வீடியோ கமெராக்களிலும் சரி பத்மநாதன் ஹோட்டலுக்கு வந்து சென்றதாகவோ அங்கு கைது செய்யப்பட்டதாகவோ எதுவித அறிகுறிகளையும் காணவில்லை என்று ரியூன் ஹோட்டல் பொதுஜன உறவு மற்றும் சந்தைப்படுத்தல், தொடர்பாடல் முகாமையாளர் பினேஷ் விறாஜ்லால் தெரிவித்தார்“. ஹேட்டலின் சீ.சீ.ரீ.வி. கமெரா கட்டமைப்பில், குறிப்பிட்ட காலப் பகுதியில் பத்மநாதனின் உருவ அமைப்பைக் கொண்ட எவரது நிழற்படமும் விழுந்திருக்கவில்லை என்றும் முகாமையாளர் மேலும் தெரிவித்தார். கோலாலம்பூரிலுள்ள ஏனைய ஹேட்டல்களுடன் ஒப்பிடுகையில் தங்கள் ஹேட்டலில் அதிக எண்ணிக்கையான சீ.சீ.ரீ.வி. கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோலாலம்பூர் ரியூன் ஹோட்டலில் வாகன தரிப்பிடம் இல்லாததால் கே.பி ஹேட்டல் வளவுக்குள் எங்கு வைத்தேனும் கைது செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் விராஜ்லால் கூறினார்.

கே.பி. தங்கள் ஹோட்டலுக்குள் இல்லை என்பது மலேசிய அரசாங்கத்திற்கு தெரியுமாதலால் அதிகாரிகள் தங்களிடம் அது பற்றி விசாரிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மலேசிய பொலிஸாரோ அரசாங்கமோ இந்த விவகாரம் தொடர்பாக ஹேட்டலுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கே.பி இந்த ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதால் உள்ளக விசாரணையை தாங்கள் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். பத்திரிகைகளில் கடந்த வாரம் செய்தி வெளியாகும் வரை ஹேட்டல் ஊழியர்களுக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாதெனவும் அவர் கூறினார். கே.பி. தமது உண்மையான பெயரை பயன்படுத்தி இருக்க மாட்டாரென்பது தங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் பத்திரிகைகளில் வெளியான அவரது உருவப்படத்தை அடிப்படையாக வைத்துப் பார்த்த போதும் அத்தகைய நபர் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரியவந்ததாக விராஜ்லால் சொன்னார்.

கே.பி தானாகச் சரணடைந்தாரா?

கே.பி. கைதுசெய்யப்பட்டாரா அல்லது தானாகச் சரணடைந்தாரா என்பது குறித்த சந்தேகம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தோன்றியுள்ளது என இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேஷியா, தாய்லாந்து அதிகாரிகள் தமது நாடுகளில் கே.பி.கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ளமையே இந்த சந்தேகங்களுக்கான முக்கிய காரணமாகவுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் கே.பி. கைது செய்யப்பட வேண்டும் என இந்தியாவே அதிக அக்கறை காட்டியதுடன் "இன்ரர்போல்" ஊடாக பிடியாணையும் பிறப்பித்திருந்தது. இதன் காரணமாகத் தாய்லாந்து அல்லது மலேஷிய அதிகாரிகள் கே.பியைக் கைதுசெய்து இந்தியாவுக்குத் தெரியாமல் இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பல உயர்மட்ட அரச தலைவர்களுக்கும் கே.பிக்கும் இடையிலான தொடர் தொலைபேசி உரையாடலின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து கே.பி.தானாக முன்வந்து சரணடைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.பி. எவ்வாறு கைது செய்யப்பட்டார், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்ற விடயத்தை இலங்கை அரசுபகிரங்கப்படுத்த மறுப்பதும் கே.பி. சரணடைந்தாரா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது

1 comment:

முகைதீன் said...

சர்வதேசப் பொலிசாரால் தேடப்படும் ஒருவரைத் தலைவராக்கி வேணுமென்றே பரபரப்புண்டாக்கும் உங்கள் அறிவிலித்தனத்தை என்னவென்பது. தமிழர் என்று சிந்திப்பதற்க்கு ஒரு கொஞ்சமாவது உங்க மண்டையில இரிக்கா??
முகைதீன்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter