Saturday, May 08, 2010

மௌனித்துப் போனது மனிதமா?? அல்லது ஆயுதங்களா??

கடந்த ஆண்டு மே மாதம் மரணப்பிடியில் வன்னி இருந்த போது எழுதிய இச்செய்தியினை அகதிகளின் நாட்குறிப்பு வருத்தத்தோடு மீண்டும் இங்கு பதிவு செய்கிறது. இன்னமும் எம்மவர்கள் சரியான அணுகுமுறையில் ஈழத்தமிழரின் அரசியலை நோக்கவில்லை என்பது வருத்தந் தருகின்ற ஒன்றாகும்.




கண்மூடிப்போன உலகமும்,வல்லூறுகளின் பிடியில் அகப்பட்டுத் தவிக்கும் அப்பாவித் தமிழ் மானிடங்களும்.....



வன்னியில் நடந்தேறிக்கொண்டிருக்கும் கொலைகளுக்கு விடுதலைப்புலிகளும், அரசுப் படைகளும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டிகின்றன. மக்கள் சாகிறார்கள்,மக்கள் சாகிறார்கள் மக்களைப் பாதுகாக்கின்றோம் மக்களைப் பாதுகாக்கின்றோம் என்று சொல்லிச் சொல்லியே மக்களை கொல்கின்ற மகத்தான பணிகளில் இளைக்காமல் சளைக்காமல் இதுவரை ஈடுபட்டிருந்த இரு தரப்பும் இழந்தவைகளைவிடவும், அப்பாவிப் பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பரிதவிக்கத், துடிதுடிக்க, ஈவுஇரக்கமற்ற முறையில் வேட்டையாடப்பட்டுக்கிடக்கிறது.
வேட்டையாடியவர்கள் வீழ்ந்துகிடக்கிற உடலங்களுக்கு எந்தவிலையும் பேசாது இன்னமும் வீழ்த்தப்படப் போகும் உடலங்கள் பற்றியே குறியாயிருக்கின்றனர். மிக மலிவாகவும், சுளுவாகவும், சத்தமின்றியும், கேவலமாகவும் சரித்துக்கொட்டிக்கிடக்கிற தமிழர்கள் உடலங்களில் கொடிநாட்டவென்று துடித்துகொண்டிருக்கும் கொடியவர்களின் காலடிகளில் வெறும் சேற்றுக்குவியலாய் குவிந்து கிடக்கிறது.
பதுங்குகுழிகளுக்குள் ஆயிரக்கணக்கானோர் மண்ணினால் புதையுண்ட நிலையில் இறந்துள்ளனர். ஆங்காங்கே சிதறிய நிலையில் கிடக்கும் இறந்தவர்களின் உடலங்களை அடக்கம்கூட செய்ய முடியாத அவலநிலைக்கு வன்னிப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பதுங்குகுழிகளுக்குள்ளேயே பலர் தங்கியிருப்பதால் உணவு, நீர் கூட அருந்தாமல் பட்டினியால் அவர்களில் பலர் அவலமாக மரணித்துப் போனார்கள்
இன்னமும்பெரும் எண்ணிக்கையானவர்கள் பாழும் நிலத்தின் கீழ் உயிரிழக்கும் நிலையில் வாடி வதங்குகிறார்கள்..
காயமடைந்து சிகிச்சை எதுவுமின்றி சாவின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் 25,000 பொதுமக்களையும் காப்பாற்ற உதவுமாறு இன்று புலிகள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.தங்கள் கையில் சடசடத்த ஆயுதங்களை மௌனிக்கச் செய்யவும் தயாரென மெய்யாகவே மெய்யாகவே அறிக்கையும் விட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு ஒபாமாவின் கருத்தினை ஏற்றுக்கொள்வதாகச்சொல்கிற புலித்தலைமையினை ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே மூன்றாம் உலக நாடொன்றின் அனுசரணையுடன் சரணடையுமாறு புலம் பெயர் தமிழர்கள் வற்புறுத்தியிருந்தால் புலிகளின் மற்றும் பொதுமக்களினதும் பெருவாரியான இழப்புக்களை ஒருவேளை தவிர்த்திருக்கலாம்.எமது மக்களுக்காகவேதான் நாம் போராடுகின்றோம் என்று எழுந்த புலிகளின்கடைசி அறிக்கை இதுவா என்று வாயில் கைவைத்திருக்கிறார்கள் புலி எல்லாம் செய்யும் என்று புலம் பெயர் நிலங்களில் பூச்சாண்டி காட்டியவர்கள். மற்றும் புலியெதிர்ப்பு என்னும் வெற்றுக்கோஸத்தோடு தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் முன்வைக்காது வேலத்திட்டமற்று புலி செய்வதையெல்லாம் வெறுமனே எதிர்த்து நின்று தங்கள் வயிறு வளர்த்தவர்கள் இனியாரை எதிர்ப்பது என்பதைப் புரியாது திகைத்து நிற்கிறார்கள்.
இன்று
அனைத்து முடிவுகளும் எங்களுக்கு எதிராகவே இருக்கிறது. , ஏமாற்றுக்காரனைவிடவும் ,முட்டாள்ச் சண்டைக்காரனுடன் முரண்டு பிடித்து தமிழர் தலை விதியை வெல்லலாம், கதையை முடிக்கலாம், என்ற தொனிப்பிலேயே ரணிலை ஒழித்து மகிந்த அரசை நிறுவ உறுதுணையாயிருந்தவர்கள் புலிகள்
இன்று அந்தப் புலிகளுக்கே ஆப்பு இறுக்கிவிட்டு மகிந்த அரசு மல்லுக்கு நிற்கிறது. உலகவல்லரசுகள் அதற்கு அச்சாணியாயிருக்கின்றன. நம்மவர் மலைபோல் நம்பியிருந்ததாகச் சொல்லிக்கொண்ட இந்தியத்தேர்தலும் எமக்கு எதிரான முடிவினை தந்துவிட்டது. கடவுள் கூட எமது தமிழ் இனத்திற்கு எதிராக செயற்படுகிறான் என்பதைப்போலவே காரியங்கள் யாவும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்பாவித்தமிழ் இனத்தை அழிக்கவென உலகக்கடவுள்களும் ஒன்றுசேர்ந்து களத்தில் இறங்கிவிட்டன. இத்தனை உயிர்களின் அழிவுக்கு பின்னர், இதுவரை காலமும் நம் போராட்டத்துக்கு உயிர்த்தியாகம் செய்த போராளிகளின் பேரழிவிற்குப்பின்னால் நாம் எதைச் சாதித்திருக்கின்றோம் என்கிற கேள்வி நிதர்சனமானது.


இத்தனை உயிர்களை அழித்த கொலைஞரிடம் உயிர்களைக் காப்பாற்றப்படக்கூடிய, இனித்தப்பும் உயிர்களை உளத்தூய்மையோடு காப்பாற்றுகின்ற உளப்பாங்கு இருக்குமா? இந் நிலையில் புலிகளின் ஆயுள்முடிந்துவிட்டது என்று ஆருடம் சொல்வோர் பலர்.நாட்கள் எண்ணப்பட்டுவிட்டது என்போர் மீதி. முள்ளிவாய்க்காலில் மூண்டெளும் புகைக்குள் எம் தமிழினக்குருதி கேட்பாரெவருமின்றிப் பாய்கிறது.
எல்லாவிதக் கொடுமைகளையும் ஏற்கத் தகுதியுள்ள இனம் தமிழினம் எனும் உலகத்துச் சான்றிதழோடு உச்சக்கட்ட கொடூரம் என்தமிழனுக்கு நடந்து முடிந்திருக்கிறது.இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. புலம் பெயர் நாடுகளில் புலியாகித் தங்களை வளர்த்தோரும், புலி எதிர்ப்பென்று தங்களை வளர்த்தோரும் அப்பாவியாயிருந்ததால் மட்டுமே அழிக்கப் பட்டதமிழன் முதுகில் இதுவரை சவாரி விட்டார்கள் என்பதே பேருண்மை. அவர்கள் தங்களைத் தாங்களே பரிசீலிக்கவேண்டிய தருணமிது.


Posted by ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! at 09:08 10 comments:
Anonymous said...
புலிகள் தோற்றுப்போவதை தெரியாதவர்களாகப் புலம் பெயர் நிலத்தில் ஒருவரும் இருக்கவில்லை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் தங்கள் பிழைப்புகளுக்காக அவர்களைத் தூக்கிப்பிடித்து இன்று அவர்கள் உயிரைச் சிதைத்தது தான் மிச்சம்.உண்மையில் புலம்பெயர் புலிகள் தங்களைப், பெண்டு பிள்ளைகளைப் பாதுகாத்துகொண்டார்கள்
மனோகரி

17 May, 2009 09:45
Anonymous said...
கரணம் தப்பினால் மரணம் என்பது எவ்வளவு சரியாப் போச்சு.இனி எல்லோரும் எதையும் எழுதலாம். பாம்பிற்குத்தான் பல்லுப் புடுங்கியாச்சே??
குடுமிக் கந்தசாமி

17 May, 2009 10:33
sulunthee said...
//புலித்தலைமையினை ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே மூன்றாம் உலக நாடொன்றின் அனுசரணையுடன் சரணடையுமாறு புலம் பெயர் தமிழர்கள் வற்புறுத்தியிருந்தால் புலிகளின் மற்றும் பொதுமக்களினதும் பெருவாரியான இழப்புக்களை ஒருவேளை தவிர்த்திருக்கலாம்//என்பது
உண்மை. புலம் பெயர் ஆட்களும் அவர்களின் ஊடகங்களும் தான் புலிகளுக்கு நாமிருக்கிறோம்,நாமிருக்கிறோம் என்று தைரியம் கொடுத்து அவர்களின் ஒட்டு மொத்த அழிவிற்கும் காரணமாயிருந்தார்கள் என்கிற வாதம் உண்மையில் சரியானது.புலம்பெயர் ஆட்கள் தங்கள் கௌரவத்திற்காகவும் வயிற்றுபிழைப்பிற்காகவும் அப்பாவிகளினதும், புலிப்போராளிகளினதும் ஒட்டு மொத்த
உயிரையும் தின்று தொலைத்துவிட்டார்களே?
அபி

17 May, 2009 10:42
Anonymous said...
//விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இத்தகவலை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி மூலம் இத்தகவலைத் தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.


150 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை..

புலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

பிரபாகரனின் உடல் என்று கருதப்படும் அந்த உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு டி.என்.ஏ சோதனை நடந்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது.//

இது உண்மையா? வெளிநாட்டுப்புலிகள்
இதுபற்றித் தெரிந்தால் உங்களை நம்பிய மக்களுக்குச் சொல்லலாமே.
அடா நானொன்று அதை வெளியில சொன்னால் நீங்கள் என்னெண்டு ஊரை ஏமாற்றி இனிக் காசு சேர்த்துக் குபேரானாகிறது என்ன?
சிவம்

17 May, 2009 10:51
Anonymous said...
//தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வன்னிக் களத்தில் 2000ற்கும் அதிகமான போராளிகளுடன்,சிறீலங்கா படையினருக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வருகின்றார் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

"தான் நான்கு மணிநேரத்திற்கு முன்பு தலைவருடன் (வே.பிரபாகரன்) தொலைபேசியில் உரையாடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்."

"விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என பல வதந்திச் செய்திகளை சிறீலங்கா அரசு அனைத்துலக ஊடகங்களுக்கு பரப்பி வருகின்றது. இந்த நேரத்தில் செ.பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு"தலைவர் களத்தில் போராடி வருகின்றார் என தெரிவித்துள்ளார்" என்பது குறிப்பிடத்தக்கது.//Tamil Tigers interview
A key Tamil Tiger leader has spoken exclusively to Channel 4 News, saying their chief is still alive and they want a political solution. Alex Thomson reports.


In an exclusive interview, LTTE Tamil Tigers head of international relations Selvarajah Pathmanathan said:

- Tamil Tiger leader Velupillai Prabhakaran is in the beseiged zone with 2000 Tamil fighters

- He spoke to by phone to Prabakharan for four hours and the orders to lay down arms came from him

- This is not a surrender, they are laying down arms to protect 25,000 injured Tamils in the area

- 3000 civilians have been killed in the area in the last 24 hours

- The doctors who were speaking to the outside world have escaped but one is injured and another has been arrested and is in a Sri Lankan military camp

- The Tamil Tigers did not fire on civilians or take human shields.

The full interview will be broadcast on Channel 4 News at 6.30 tonight. The transcript of the interview is below.

Alex Thomson (AT): What is the latest situation for LTTE in Sri Lanka?

Selvarajah Pathmanathan (SP): Our organisation is ready to lay down its arms and participate in the peace process.

AT: How many cadres or soldiers are involved here?

SP: Less than 2000 cadres. They are in the perimeter area. We prepared to stop the war. Our people are dying. Every hour more than a hundred dying. More than 3000 die from yesterday. 25,000 wounded.

AT: These are civilians, yes?

SP: Yes.

AT: What are you calling on the Sri Lankan government to do?

SP: From yesterday we are calling on talks to stop the fighting and immediate ceasefire. We are ready to lay down the arms and participate in the peace process.

AT: Is this end of the war after all these wars?

SP: Yes we'd like to end this war.

AT: What do you say that the LTTE will continue fighting by other means, guerrilla war?

SP: I believe that over the 38 years we fight and only the civilian and human life are every day dying. The...in another 30 years will continue we don't believe that - we believe in peaceful way for solution for Tamil people.

AT: What are the orders from the LTTE leader Velupillai Prabhakaran ?

SP: Prabhakaran actually ordered that. For 4 hours I talked to him - he passed this message to Sri Lanka Government and international players...and we are waiting for their answer. Until now no one give their answer or no one stop the war.

AT: Is Mr Prabhakaran still in this area in Sri Lanka?

SP: Yes sir.

AT: And you spoke to him from this surrounded area, and he is ready to surrender?

SP: Not surrender. We are lay down the arms not surrender.

AT: Why not surrender?

SP: Actually its mainly a thing...about security...we take arms for freedom struggle - why surrender to them. We ready to work with them not surrender.

AT: Why did LTTE take so many human shields and not allow them to leave?

SP: We never take the civilian with us. The civilian they are relative our family or the related. Or they don't believe Sri Lankan army will give security to them. They don't like to go to camp. As you know they torture and harassment. They don't want to go to Sri Lanka forces. The government stop medicine and food. People are dying without. We asked - we sent 35,000 out ourselves. We don't take human shield. It's the wrong information. Wrong propaganda.

AT: So its not true then that LTTE cadres fired on civilians to prevent them leaving?

ST: Actually we never shoot them. Some crossfire happened. Why would we kill our own people?

AT: Can I ask about the two doctors who were giving interviews about the condition of the civilians. They have disappeared?

SP: Last night one doctor injured. We send them to the military side. And for the treatment. Acutally now I heard one doctor in Colombo for treatment other in military camp.

AT: To summarise, the condition of the commander Pr...LTTE are willing to lay down weapons but not surrender?

SP: Yes not surrender - willing to lay down arms not surrender.

AT: So is the war over or changing?

SP: War maybe over or changing to political way. Depending on few hours to see what going on. We are saying...willing to lay down arms...willing to lay down arms and find political solution for our nation.//



மேலுள்ளதுதான் உண்மையான Channel 4 க்கு அளித்த பேட்டி.

உண்மையில் பிரபா உயிரோடும் போராடும் வலுவோடும் இருக்கிறார் என்பதற்கு இதைவிட என்னசாட்சி???
விஜயா

17 May, 2009 11:32
ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...
உண்மையில் பிரபா இருக்கிறாரா? இன்னும் போராடுவாரா? என்கிற கேள்விகளெல்லாம் இந்த நேரத்தில் அபத்தமானது.புலிகளையும் பொதுமக்களையும் காப்பாற்ற புலிகள் 3வது நாடொன்றில் சரணடைவது என்பது இனி எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை .ஆயினும் அதனைத்தான் உண்மையில் புலியின் வெளிநாடுகளுக்குப் பேசவல்ல அதிகாரிகள் தேர்ந்திருக்கவேண்டும். அவர்களின் தீர்க்கதரிசனமில்லாத ஆணவப்பேச்சுக்களால் அடைந்தது அளப்பரிய தமிழரின் சொத்திழப்பும், உயிரிழப்பும் தான்.

17 May, 2009 11:41
Anonymous said...
இது தீவிரவாதத்தை நம்பும் எல்லாருக்கும் ஒரு பாடம். இலக்கு உன்னதமாக இருப்பினும் உங்கள் பாதை தவறென்றால் இதுதான் நிகழும். நன்றி கெட்ட ஈழமே, யோசித்து பார்.
மலேசியா தமிழர்கள் கொடி ஏந்தி நின்றபோது நாங்கள் இங்கே எங்கள் தலைவர்களை பந்தாடினோம். புத்திகெட்ட நன்றி கெட்ட ஈழமே,
இந்தியாவில் நாங்கள் 5% தான். இருபினும் அறவழி போராட்டங்களால் முக்கிய மாநிலமாக உயர்ந்து உள்ளோம். ஹிந்தி முதல் ஜாதி வரை திணிக்க பட்டு, போராடி வென்றிருக்கிறோம்.

எத்தனையோ சந்தர்ப்பங்கள் ஒன்றைக்கூட ஏற்கவில்லை, தமிழ் ஈழம் என்ற மக்கு நிலையை எடுத்து எல்லா இடமும் அழித்ததும் மக்களை பலிகொடுத்ததும்தான் முடிவு கண்டது எதுவுமில்லை. இவர்கள் திருந்துவதற்கு இடமில்லை இன்றைய பேச்சு மீண்டும் கொரில்லா யுத்தமாம் தனிநாட்டுக்கான போராட்டமாம். இத்தனை அழிவுக்கு பின்னும் ஒருவித முன்னேற்றமுமில்லை சீரான சிந்தனை இல்லை படித்தும் அறிவிலிகள் மொக்கு சிங்களவனை பாருங்கள் அதை பார்த்தாவது திருந்துங்கள்.

ஈழ பிரச்சினையை வைத்து நெடுமாறன், வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் இங்கு பிழைப்பு நடத்தி வந்தார்கள். இனி அவர்கள் கதி?
pukai saral

17 May, 2009 13:34
ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...
கீழ்வரும் செவ்வி மகிழ்வைத்தருகிறது. இவ்வாறான அழுத்தத்தை வைகோ முன்னரே செய்திருக்க வேண்டும். எல்லாம் முடிந்து தானும் தேர்தலில் பாடம் கற்றபின் வெளியிடுவது புத்திசாலிதனமானதாயில்லை. வழிகாட்ட வேண்டியவர்களே புலியின் வாழ்வைக் குழிதோண்டிப்புதைத்திருக்கிறார்கள்.
தமிழ்சித்தன்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரௌன், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபேண்ட், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் ஆகியோர்க்கு வைகோ இன்று (17.5.2009) மின் அஞ்சல் மற்றும் தொடர்புடைய அலுவலகங்களுக்குத் தொலைநகலில் அனுப்பி உள்ள அவசரக்கடிதம்.

அன்புடையீர்,

இலங்கையின் முல்லைத்தீவில் ஒரு மனிதப் பேரழிவு நடந்துகொண்டு இருக்கிறது. இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகளால், தமிழர்கள் ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டார்கள். அந்தப் போராட்டத்தை விடுதலைப்புலிகள் முன்னெடுத்து நடத்தினார்கள்.

தற்போது, விடுதலைப்புலிகள், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசு அதிகாரிகளிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளனர். அதே வேளையில் போராளிகள் மற்றும் பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் ஒருபோதும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய மாட்டார்கள். அதைவிட உயிரை மாய்த்துக் கொள்வார்கள்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசுகள் உடனடியாக நேரடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கான போராளிகள் சயனைடுக் குப்பிகளைக் கடித்துத் தற்கொலை செய்து கொள்வார்கள். நினைத்துப் பார்க்க முடியாத அத்தகைய கொடூரம் நிகழுமானால், உலகம் முழுமையும் வாழுகின்ற பத்துக்கோடித் தமிழர்களின் இதயங்கள் துயரத்தால் நொறுங்கிப் போகும்.

எனவே, தாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு கண்ணீர்மல்க வேண்டுகிறேன்.

வைகோ

‘தாயகம்’

பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
சென்னை
17.05.2009

17 May, 2009 13:56
வெத்து வேட்டு said...
ஒரு கரும்புலியின் அம்மாவும் தலைவர் பிரபாவும் சந்தித்தால்
க.பு. அம்மா: தம்பி என்னோட மகன்
எங்கே?
பிரபா: அவன் என்னை காப்பாத்த
ஆமிகாரங்களுக்குள்ளே
பூந்துட்டான்
க.பு. அம்மா:அப்போ தமிழீழம்
கிடைக்குமா?
பிரபா: ஜோக் அடிக்காதீங்க ...
பத்மநாதன் சொன்னது
தெரியாதா? நாங்க ஆயுதத்தை
கீழே போடுட்டோம் ஹி ஹி ஹி
க.பு. அம்மா: தம்பி இதையே ஒரு மூணு
மாசத்துக்கு முன்
செஞ்சிருந்தா ஒரு
அஞ்சாயிரம் சனமும்
என்னோட புள்ளையும்
பிழைச்சிருக்குமே ..
பிரபா: போராட்டத்திலே இதெல்லாம்
சகஜமம்மா ..ஹி ஹி
க.பு. அம்மா: ஐயோ பிள்ளை ...
பிரபா: ஆமா என்புள்ளே சார்லஸ் தான் உங்க அடுத்த தலைவர்.. உன்னோட கடைசி பிள்ளையை எங்க கட்சி வேலை செய்ய அனுப்புங்க சரியா...


i never believed in Kalaingar.. but Kalaingar and people voted for DMK alliance saved Tamil Nadu from these stupid "Tamil" madness...
this Nedumaran, Seeman Parathirajah are idiotics and could have destroyed Tamil Nadu just like the tamils in Srilanka...
look now ltte leaders escaped with their family..only innocent people got killed and suffered...
i am happy that Praba is alive..he will be living example of a COWARD
who destroyed the people who trusted him..
he abondoned them... let them die like stray dogs in Vanni

தூ ..

17 May, 2009 18:15
ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...
வருக வெத்துவேட்டு நண்பரே!
உங்களின் ஆதங்கம் புரிகிறது.ஆனாலும் தமிழர் பிரச்சனை என்பது பிரபாவுடனும் அவர் சார்ந்த புலியுடனும் மட்டுமே சம்பந்தமான ஒன்றல்ல. எங்களது தப்பான அரசியல் வாதிகள் போன்றே தப்பான அணுகு முறைகளால் புலிகள் தலைமை தமிழர் தலைவிதியைத் திசை திருப்பி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் தமிழருக்கான அடிப்படைச் சுய நிர்ணயத்தை எந்தச் சிங்கள அரசியல் வாதிகளும் எப்போதும் அங்கீகரித்ததில்லை என்ற உண்மை மறுபுறத்தில் உண்டு. சார்ஸ் அன்ரனியையும் கைப்பற்றிவிட்டதாகச் செய்தி வந்துள்ளது . உங்கள் கரும்புலி அம்மாவிடம் கூறிவிடுங்கள்.
தமிழ்சித்தன்

17 May, 2009 21:33
Post a Comment

Links to this post

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter